ஆகாச கங்கை ஆகாச கங்கை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
ஆகாச கங்கை ஆகாச கங்கை
ஸ்ரீ ராமானுஜரின் மாமனான திருமலைநம்பி என்பவர் வெங்கடாசலபதியின் கைங்கரியத்திலேயே தன் வாழ்நாளைக் கழித்தவர். வெங்கடாசலபதியின் அபிஷேகத்திற்கு இவர் அடிவாரத்தில் இருக்கும் ஆழ்வார் தீர்த்தத்தில் இருந்து நீர் கொண்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் ஒருநாள், திருமலை கோவிலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பாபநாச நீர் வீழ்ச்சி இருப்பதை அறிந்தார்.
எனவே தினமும் அங்கிருந்து பெருமாளின் அபிஷேகத்திற்கு நீர் கொண்டு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருடைய பக்தியை ஏழுமலையான் சோதித்துப் பார்க்க எண்ணினார். ஒருநாள் திருமலைநம்பி பாபநாசம் தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெருமாள் தன் உருவத்தை ஒரு எளிய வேடன் போல மாற்றினார். பிறகு திருமலைநம்பியை நெருங்கி தன்னுடைய தாகத்தைத் தணிக்கக் கொஞ்சம் நீர் ஊற்றுமாறு வேண்டினார். சுவாமிகைங்கரியத்திற்குக் கொண்டு செல்லப்படும் நீர் என்பதால் திருமலைநம்பி வேடனுக்கு நீர் கொடுக்க மறுத்தார்.
இதனால். `வேடன்' ஒரு அம்பை எய்து பானையில் ஓட்டை போட்டு அதில் இருந்த நீர் அனைத்தையும் குடித்து முடித்தான். நடந்ததை அறியாத திருமலைநம்பி கோவிலை நெருங்கியபோது பானை காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதே சமயம் ஏழுமலையானுக்கு தினசரி நடத்தப்படும் அபிஷேகம் நடந்தேறியிருப்பதையும் கண்டு திகைத்தார். மீண்டும் நீர் கொண்டு வர பாபநாசம் நோக்கி அவர் நடந்தபோது `வேடன்' அவர் எதிரில் வந்து, `ஐயா, பாபநாசம் அளவுக்குப் புனிதமான நீர் இங்கே அருகிலேயே கிடைக்கும்போது நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் செல்ல வேண்டும்?'' எனக் கேட்டார்.
பிறகு தன் வேடம் களைந்து வில்லில் அம்பு பூட்டி எய்தான். அம்பு குத்திட்டு நின்ற இடத்தில் இருந்து நீர் குபுகுபுவென்று பொங்கி வழிந்தது. வெங்கடாசலபதியாலேயே தோற்றுவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த நீர்ச்சுனை ஆகாச கங்கை என அழைக்கப்படுகிறது.
திருமலை கோவிலில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாகவே இது அமைந்திருக்கிறது. பாபநாசம், ஆகாச கங்கை இரண்டுமே சரிசமமாகப் புனிதத்துவம் வாய்ந்தவை என்ற காரணத்தினால், பக்தர்கள் இந்த இரண்டு தீர்த்தங்களுக்கும் சென்று நீராடி விட்டு வருகிறார்கள்.
புரட்டாசி மாதம் இந்த இரு தீர்த்தங்களில் புனித நீராடினால் ஏழுமலையானின் அருளை எளிதில் பெற வழிவகை செய்யும்.
எனவே தினமும் அங்கிருந்து பெருமாளின் அபிஷேகத்திற்கு நீர் கொண்டு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவருடைய பக்தியை ஏழுமலையான் சோதித்துப் பார்க்க எண்ணினார். ஒருநாள் திருமலைநம்பி பாபநாசம் தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெருமாள் தன் உருவத்தை ஒரு எளிய வேடன் போல மாற்றினார். பிறகு திருமலைநம்பியை நெருங்கி தன்னுடைய தாகத்தைத் தணிக்கக் கொஞ்சம் நீர் ஊற்றுமாறு வேண்டினார். சுவாமிகைங்கரியத்திற்குக் கொண்டு செல்லப்படும் நீர் என்பதால் திருமலைநம்பி வேடனுக்கு நீர் கொடுக்க மறுத்தார்.
இதனால். `வேடன்' ஒரு அம்பை எய்து பானையில் ஓட்டை போட்டு அதில் இருந்த நீர் அனைத்தையும் குடித்து முடித்தான். நடந்ததை அறியாத திருமலைநம்பி கோவிலை நெருங்கியபோது பானை காலியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதே சமயம் ஏழுமலையானுக்கு தினசரி நடத்தப்படும் அபிஷேகம் நடந்தேறியிருப்பதையும் கண்டு திகைத்தார். மீண்டும் நீர் கொண்டு வர பாபநாசம் நோக்கி அவர் நடந்தபோது `வேடன்' அவர் எதிரில் வந்து, `ஐயா, பாபநாசம் அளவுக்குப் புனிதமான நீர் இங்கே அருகிலேயே கிடைக்கும்போது நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் செல்ல வேண்டும்?'' எனக் கேட்டார்.
பிறகு தன் வேடம் களைந்து வில்லில் அம்பு பூட்டி எய்தான். அம்பு குத்திட்டு நின்ற இடத்தில் இருந்து நீர் குபுகுபுவென்று பொங்கி வழிந்தது. வெங்கடாசலபதியாலேயே தோற்றுவிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த நீர்ச்சுனை ஆகாச கங்கை என அழைக்கப்படுகிறது.
திருமலை கோவிலில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாகவே இது அமைந்திருக்கிறது. பாபநாசம், ஆகாச கங்கை இரண்டுமே சரிசமமாகப் புனிதத்துவம் வாய்ந்தவை என்ற காரணத்தினால், பக்தர்கள் இந்த இரண்டு தீர்த்தங்களுக்கும் சென்று நீராடி விட்டு வருகிறார்கள்.
புரட்டாசி மாதம் இந்த இரு தீர்த்தங்களில் புனித நீராடினால் ஏழுமலையானின் அருளை எளிதில் பெற வழிவகை செய்யும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya