Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


குமரனின் திருவிளையாடல்

Go down

குமரனின் திருவிளையாடல் Empty குமரனின் திருவிளையாடல்

Post by oviya Sun Nov 30, 2014 1:39 pm

முசுகுந்த சக்கரவர்த்தியின் கட்டளைப்படி, திருவாரூர் தியாகராஜபெருமானின் பூஜைக்காக பூம்புகாரில் இருந்து ஆயர்கள் பாற்குடங்களை சுமந்து சென்றனர். இடையில் திருவிடைக்கழியில் தங்கி இளைப்பாறினர். அப்போது முருகனின் திருவிளையாடலால் பால் மாயமாக மறைந்தது.

ஆயர்கள் திருவாரூர் சென்றபோது குடங்களில் பால் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி விசாரணை நடத்த, முசுகுந்த சக்கரவர்த்தி, தன் காவலர்களுக்கு உத்தரவிட்டார். காவலர்கள் திருவிடைக்கழிக்கு வந்து மரத்தடியில் வீற்றிருந்த முருகனை, திருவாரூருக்கு வரும்படி அழைத்தனர்.

அவர் வரமறுத்ததால் அவரை இழுத்தனர். இழுத்தும் வரமறுத்ததால், ஆயர்களை முருகனுக்கு காவல் இருக்கும்படி கூறிவிட்டு, காவலர்கள் முசுகுந்த சக்கரவர்த்தியிடம் சென்று விவரத்தைக் கூறினர். இந்த நிலையில் சக்கரவர்த்தியின் மகனை பாம்பு கடித்துவிட்டது.

வைத்தியங்கள் பலனளிக்காமல் அவன் இறந்துவிட்டான். இதையடுத்து முசுகுந்த சக்கரவர்த்தி, காவலர்களுடன் திருக்குராமரத்தடிக்கு வந்தார். மரத்தின் அடியில் இருப்பவர் குமாரபெருமான் என உணர்ந்து அவரை வணங்கி நின்றார்.

முருகனும் அவருக்கு அருள்புரிந்து திருக்குராமர இலையினை கசக்கி பிழிந்து, பாம்பு கடித்த சக்கரவர்த்தியின் மகனுக்கு கொடுத்தார். அவர் உயிர் பிழைத்து எழுந்தான். மனம் மகிழ்ந்த சக்கரவர்த்தி, முருகப்பெருமானுக்கு திருவிடைக்கழி தலத்தில் கோவில் அமைத்தான்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum