Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பஞ்சமி தீர்த்த விழா: திருச்சானூர் புஷ்கரணியில் 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

Go down

பஞ்சமி தீர்த்த விழா: திருச்சானூர் புஷ்கரணியில் 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர் Empty பஞ்சமி தீர்த்த விழா: திருச்சானூர் புஷ்கரணியில் 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்

Post by oviya Sun Nov 30, 2014 1:41 pm

திருமலை, நவ.28–

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 19–ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 8 நாட்களாக வெகு விமரிசையாக நடந்து வருகிறது.

விழாவின் 9–வது நாளான நேற்று காலை 7 மணியளவில் பல்லக்கு வாகன வீதி உலா உற்சவம் நடந்தது.

நேற்று பஞ்சமி தீர்த்த விழாவையொட்டி அங்குள்ள தெப்பக்குளத்தில் நீராடுவதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாது திரண்டு இருந்தனர். நேரம் செல்லச்செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் காலை உற்சவர் பத்மாவதி தாயார் பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்குமாட வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் உலா வந்து அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவருக்கு சூர்ணாபிஷேகமும், காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை கிருஷ்ணர் முக மண்டபத்தில் ஸ்நாபன திருமஞ்சனமும் நடந்தது.

பின்னர் முக்கிய நிகழ்ச்சியாக பகல் 11.45 மணியில் இருந்து 12 மணிவரை கோவில் புஷ்கரணியில் பஞ்சமி தீர்த்த விழா (சக்கர ஸ்நானம்) நடக்க உள்ளது. கோவில் புஷ்கரணியில் கூடியிருந்த சுமார் 1½ லட்சம் பக்தர்கள் புனித நீராடினர். அவர்கள் பக்தி கோஷம் எழுப்பியது அந்த பகுதியையே பரவசத்தில் ஆழ்த்தியது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கோவில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி இன்று அதிகாலை 3 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ர பாத சேவை, 3.30 மணியில் இருந்து 4 மணிவரை சகஸ்ர நாமார்ச்சனை நடந்தது.

அதிகாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை நித்யார்ச்சனை நடந்தது. அதைத்தொடர்ந்து மூலவர் மண்டபம் சுத்தம் செய்யப்பட்டு 5 மணியில் இருந்து 6 மணிவரை மூலவர் பத்மாவதி தாயாருக்கு அபிஷேகமும், 6 மணியில் இருந்து 7.30 மணிவரை சிறப்பு அலங்காரமும், நைவேத்தியமும் செய்யப்பட்டது.

மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை புஷ்ப யாகம் நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து 7.30 மணிவரை மகா நைவேத்தியமும், மங்கள ஆரத்தியும், ஆஸ்தானமும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோவில் நடை சாத்தப்படுகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
» சிவராத்திரி, மாசி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடல்
» திருப்போரூர் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து முதல் கிருத்திகை: 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» திருமலையில் ரத சப்தமி விழா : மலையப்ப சுவாமியை லட்சம் பக்தர் தரிசனம்
» புனித கங்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum