Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சுகப்பிரசவம் நடக்க பரிகாரம்

Go down

சுகப்பிரசவம் நடக்க பரிகாரம் Empty சுகப்பிரசவம் நடக்க பரிகாரம்

Post by oviya Sat Dec 06, 2014 1:16 pm

அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோவிலில் உள்ள இறைவியின் பெயர் கர்ப்பரட்சாம்பிகை. கர்ப்பமாக இருப்பவர்கள் இக்கோவிலில் வந்து வழிபட்டால் எந்தவித கர்ப்ப கோளாறுகளோ, பேறுகால ஆபத்து போன்ற பிரச்சனைகள் வராமல் சுகபிரசவம் ஆகும் என்பது உண்மை.

இவ்வாலயத்தின் இறைவிக்கு கர்ப்பரட்சாம்பிகை என்று பெயர் வர காரணம் என்ன? ஏன் கருவை காத்து ரட்சிக்கிறாள்? என்பதற்கான ஒரு புராண கதையை பார்க்கலாம்.

நிருத்துவ முனிவரும் அவர் மனைவி வேதிகையும் இத்தலத்தில் வசித்து வந்தனர். ஒரு முறை நிருத்துவ முனிவர் ஒரு முக்கிய காரணமாக் வெளியூர் செல்ல நேர்ந்தது. அவர் மனைவி வேதிகை அப்போது கர்ப்பமுற்று இருந்தாள். அக்காலம் நல்ல வெய்யில் காலமாதலால் வேதிகை மிகவும் களைப்புற்று வீட்டில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஊர்த்துவ முனிவர் என்ற மற்றொரு தவசீலர் இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். வெய்யில் காலம் காரணமாக அவரும் மிகவும் களைப்புற்று வீட்டில் இருப்பவர்களால் உணவும் தண்ணீரும் கிடைக்கும் என்று கருதி குரல் கொடுத்து கூப்பிட்டார். ஆனால் யாரும் வெளி வராதது கண்டு உள்ளே எட்டிப் பார்க்க வேதிகை அவருக்கு எதிர்புறமாக திரும்பிப் படுத்து உறங்கக் கண்டார்.

வேதிகை கர்ப்பமுற்று களைப்பால் படுத்து இருப்பதை அறியாத அவர் கோபமுற்று அவளை சபித்துவிட்டு சென்று விட்டார். விழித்து எழுந்த வேதிகை பார்ப்பதற்குள் அவர் வெகு தூரம் சென்று விட்டார். முனிவரின் கோபத்திற்கு ஆளாகி விட்ட அச்சத்தில் அவள் முல்லைவன நாதரையும் இறைவியையும் வணங்கி தன் கர்ப்பத்தைக் காப்பாற்றச் சொல்லி வழிபட்டாள்.

இறைவியும் வேதிகை பக்திக்கு அவள் கருவைக் காப்பாற்றி அருள் புரிந்தாள். ஊர் திரும்பிய நிருத்துவ முனிவர் நடந்தவற்றைப் பற்றி கேள்விப்பட்டு இறைவியை வணங்கி இத்தலத்திற்கு வந்து வழிபடும் கர்ப்பிணி பெண்கள் யாவருக்கும் சுகப்பிரசவம் ஆகும்படியும், அவர்கள் கருவை காத்து ரட்சிக்கும் படியும் வரம் வேண்டினார். அவ்வாறே இறைவியும் வரம் அளித்து அருள் புரிந்தாள். அன்று முதல் இத்தலத்து இறைவி கருகாத்தநாயகி என்றும் கர்ப்பரட்சாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள்.

வெகு நாட்கள் திருமணம் தடைப்பட்டு வருபவர்கள், குழந்தை இல்லாத பெண்களும் இக்கோவிலுக்கு நேரில் வந்து அம்பாள் சந்நிதி படியில் நெய்யால் மெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் விரைவில் திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு உண்டாகும்.

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்களுக்கு கர்ப்பரட்சாம்பிகையின் திருப்பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் நெய்யை தம்பதிகள் தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சிறிதளவு சாப்பிட்டு வர விரைவில் கருத்தரிக்கும்.

கர்ப்பம் அடைந்த பெண்கள் சுகபிரசவம் ஆவதற்காக கர்ப்ப ரட்சாம்பிகை திருப்பாதத்தில் வைத்துக் கொடுக்கப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி ஏற்படும் போது வயிற்றில் தடவினால் எந்தவித கோளாறுகளோ, பேறுகால ஆபத்துக்களோ, பின்விளைவுகளோ இல்லாமல் சுகபிரசவம் ஆகும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum