தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
தீப திருவிழா: அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை துர்க்கை அம்மன் உற்சவம்
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது கார்த்திகை தீபத் திருவிழா. இத்திருவிழாவைக் காண உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா, ஸ்ரீ துர்க்கையம்மன் உற்ஸவத்துடன் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்குகிறது. தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை காலை 6.05 மணிக்குமேல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.
தொடர்ந்து, தினமும் காலை, இரவு வேளைகளில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. தீபத் திருவிழாவின் முதல் நாளான நவம்பர் 26ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா, மூன்றாம் நாளான நவம்பர் 28–ந் தேதி 1008 சங்காபிஷேகம், ஆறாம் நாளான டிசம்பர் 1–ந் தேதி 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்சரதங்களின் வீதியுலா டிசம்பர் 2–ந் தேதி காலை 6.05 மணிக்குமேல் 7.05 மணிக்குள் தொடங்கி இரவு வரை நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 5–ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்நிலையில், தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் கோவிலில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கோவிலில் உள்ள சுவாமி புறப்பாடுக்கான வாகனங்களை சுத்தப்படுத்தி, வர்ணம் பூசும் பணியில் கோவில் ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, கோவில் பிரகாரங்களை வர்ணங்களால் புதுப்பிப்பது, தீப விளக்குகளை சுத்தப்படுத்துவது, கோவிலின் அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இது தவிர, சுவாமி தரிசனத்துக்கு வரும் பல லட்சம் பக்தர்களை முறைப் படுத்தத் தேவையான கியூ வரிசையை கோவிலில் அமைக்கும் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, தேரோட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் தேர்களில் மராமத்துப் பணிகள் மேற்கொள்வது தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகாதீப கொப்பரையை தூய்மைப்படுத்தி வர்ணம் பூசும் பணிகள் மற்றும் 3 நாள் நடைபெறும் தெப்பல் உற்சவத்துக்கான தெப்பலை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கோவில் இணை ஆணையர் இரா.செந்தில் வேலவன் தலைமையில் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள், ஆச்சாரிகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபத்திருவிழாவை யொட்டி, அருணா சலேஸ்வரர் கோவிலின் 9 கோபுரங்கள் மற்றும் பிரகாரங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் சில நாள்களாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்து, அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மாலை எரியவைக்கப்பட்டன.
இதனால், திருவண்ணா மலை நகரமே ஜொலிக்கத் தொடங்கியுள்ளது. மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கோவில் கோபுரங்களை பக்தர்கள் வணங்கி மகிழ்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா, ஸ்ரீ துர்க்கையம்மன் உற்ஸவத்துடன் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்குகிறது. தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை காலை 6.05 மணிக்குமேல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.
தொடர்ந்து, தினமும் காலை, இரவு வேளைகளில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. தீபத் திருவிழாவின் முதல் நாளான நவம்பர் 26ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா, மூன்றாம் நாளான நவம்பர் 28–ந் தேதி 1008 சங்காபிஷேகம், ஆறாம் நாளான டிசம்பர் 1–ந் தேதி 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்சரதங்களின் வீதியுலா டிசம்பர் 2–ந் தேதி காலை 6.05 மணிக்குமேல் 7.05 மணிக்குள் தொடங்கி இரவு வரை நடைபெறுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 5–ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
இந்நிலையில், தீபத்திருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் கோவிலில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கோவிலில் உள்ள சுவாமி புறப்பாடுக்கான வாகனங்களை சுத்தப்படுத்தி, வர்ணம் பூசும் பணியில் கோவில் ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, கோவில் பிரகாரங்களை வர்ணங்களால் புதுப்பிப்பது, தீப விளக்குகளை சுத்தப்படுத்துவது, கோவிலின் அனைத்துப் பகுதிகளையும் தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இது தவிர, சுவாமி தரிசனத்துக்கு வரும் பல லட்சம் பக்தர்களை முறைப் படுத்தத் தேவையான கியூ வரிசையை கோவிலில் அமைக்கும் பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல, தேரோட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் தேர்களில் மராமத்துப் பணிகள் மேற்கொள்வது தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் மகாதீப கொப்பரையை தூய்மைப்படுத்தி வர்ணம் பூசும் பணிகள் மற்றும் 3 நாள் நடைபெறும் தெப்பல் உற்சவத்துக்கான தெப்பலை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கோவில் இணை ஆணையர் இரா.செந்தில் வேலவன் தலைமையில் கோவில் ஊழியர்கள், உபயதாரர்கள், ஆச்சாரிகள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபத்திருவிழாவை யொட்டி, அருணா சலேஸ்வரர் கோவிலின் 9 கோபுரங்கள் மற்றும் பிரகாரங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் சில நாள்களாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்து, அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை மாலை எரியவைக்கப்பட்டன.
இதனால், திருவண்ணா மலை நகரமே ஜொலிக்கத் தொடங்கியுள்ளது. மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் கோவில் கோபுரங்களை பக்தர்கள் வணங்கி மகிழ்கின்றனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா உற்சவம் தொடங்கியது
» மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் : நாளை வெண்ணைத்தாழி உற்சவம்
» மீனாட்சி அம்மன்–நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி திருவிழா
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
» மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் : நாளை வெண்ணைத்தாழி உற்சவம்
» மீனாட்சி அம்மன்–நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி திருவிழா
» மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 29–ந்தேதி தொடக்கம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya