பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணமங்கை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணமங்கை
கிருஷ்ணாரண்யம் எனும் புண்ணிய பிரதேசத்திற்குள் அமைந்திருக்கிறது இந்தத் தலம். ஆதியில் பிருகு முனிவருக்கு மகளாக அவதரித்தாள் திருமகள். அதுவும் திருப்பாற்கடலில் தோன்றியதுபோல் இத்தலத்தின் திருக்குளத்தில் தோன்றிய பிராட்டியை பார்க்க எல்லா தேவர்களும் கூடினார்கள். ஸ்தோத்திரங்கள் கூறி தொழுதார்கள். ஐராவதம் தங்கக் கலசத்தில் தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தது. அத்தீர்த்தம் இத்திருக்குளத்திலும் பரவியது. அதனாலேயே தாயார் அபிஷேகவல்லி எனும் திருநாமம் பூண்டாள். கிருஷ்ண மங்கா என்றே பிருகு மகரிஷி அழைத்தார். அதுவே திருக்கண்ணமங்கை என்றாகி, தாயாரின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.
‘தன் மகளை பகவானுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே, எப்படி வருவாரோ’ என்று பிருகு அவ்வப்போது கவலையோடு இருப்பார். பகவான் பக்தவத்சலன் எனும் திவ்யமான நாமத்தோடு வந்து கிருஷ்ண மங்கையை கரம் பிடித்தார். மங்களமான திருமகள் இங்கு மங்களமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். லட்சுமி தவமியற்றியதால் லட்சுமி வனம் என்றும் திருமணம் நடைபெற்றதால் கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது. திருமணத்தைக் காண தேவர்கள் குவிந்ததோடு எப்போதும் இக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டுமென தேனீக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்தபடியே பார்த்து மகிழ்கிறார்கள். இன்றும் தாயார் சந்நதியின் வடபுறத்திலுள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் தேன் கூடு உள்ளது.
திருமங்கையாழ்வார் ஒன்பது பாசுரங்களை இத்தலத்தில் சாதித்துவிட்டு, ‘‘புரிகிறதா?’’ என்று பெருமாளையே கேட்கிறார். ‘‘என்ன அர்த்தம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார், பெருமாள். திருமங்கையாழ்வார் தன்னுடைய பத்தாவது பாசுரத்தில், ‘‘மெய்மை சொல்லில் வெண் சங்க மொன்றேந்திய கண்ண, நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே’’ என்கிறார். அதாவது, ‘‘கண்ணா, வெண் சங்கத்தை ஏந்திக் கொண்டு, சர்வ வியாபியாக இருக்கும் நீயே ஆலோசித்துக் கொண்டிருக்கிறாயே! பரவாயில்லை. புரிந்து கொள்ள வேண்டுமெனில் அடியேனிடத்தில் சிஷ்யனாக வாரும்’’என்றே அழைத்து விட்டார்.
உடனே, எம்பெருமானுக்கு திருமங்கையாழ்வாரின் பாடல்களை கற்க பேராவல் பொங்கியது. இதற்காகவே பெரியவாச்சான் பிள்ளை என்கிற மேதாவியாக அவதாரம் செய்தார். இவருக்கு கற்றுக் கொடுப்பதற்காக திருமங்கையாழ்வாரே நம்பிள்ளையாகவும் அவதரித்தார். ஆவணி மாத ரோகிணியில்தான் கண்ணபிரான் அவதரித்தான். அதே ரோகிணி நட்சத்திரத்தில் பெருமாள், பாடம் கேட்கும் பொருட்டு பெரிய வாச்சான் பிள்ளையாக அவதரித்தார். இவருக்கு பால பிராயத்தில் கிருஷ்ணன் எனும் திருநாமமும் உண்டு.
அதேபோல் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த திருமங்கையாழ்வார், அதே கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாக அவதரித்தார். என்னவொரு பொருத்தம்! பக்தவத்சலப் பெருமாள், கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பிரமாண்டமான பேரழகு பொருந்திய திருவுருவம். தாயாருக்கு கண்ணமங்கை நாயகி என்று திருப்பெயர். சிவபெருமான் நான்கு உருவமெடுத்து இத்தலத்து நான்கு திக்குகளையும் காத்து வருவதாக ஐதீகமுண்டு. திருவாரூரிலிருந்து வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
‘தன் மகளை பகவானுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டுமே, எப்படி வருவாரோ’ என்று பிருகு அவ்வப்போது கவலையோடு இருப்பார். பகவான் பக்தவத்சலன் எனும் திவ்யமான நாமத்தோடு வந்து கிருஷ்ண மங்கையை கரம் பிடித்தார். மங்களமான திருமகள் இங்கு மங்களமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். லட்சுமி தவமியற்றியதால் லட்சுமி வனம் என்றும் திருமணம் நடைபெற்றதால் கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம் என்றழைக்கப்படுகிறது. திருமணத்தைக் காண தேவர்கள் குவிந்ததோடு எப்போதும் இக்கோலத்தை கண்டு கொண்டே இருக்க வேண்டுமென தேனீக்களாக உருவெடுத்து கூடு கட்டி அதிலிருந்தபடியே பார்த்து மகிழ்கிறார்கள். இன்றும் தாயார் சந்நதியின் வடபுறத்திலுள்ள மதிலின் சாளரத்திற்கு அருகில் தேன் கூடு உள்ளது.
திருமங்கையாழ்வார் ஒன்பது பாசுரங்களை இத்தலத்தில் சாதித்துவிட்டு, ‘‘புரிகிறதா?’’ என்று பெருமாளையே கேட்கிறார். ‘‘என்ன அர்த்தம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்’’ என்றார், பெருமாள். திருமங்கையாழ்வார் தன்னுடைய பத்தாவது பாசுரத்தில், ‘‘மெய்மை சொல்லில் வெண் சங்க மொன்றேந்திய கண்ண, நின்தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் கவியின் பொருள்தானே’’ என்கிறார். அதாவது, ‘‘கண்ணா, வெண் சங்கத்தை ஏந்திக் கொண்டு, சர்வ வியாபியாக இருக்கும் நீயே ஆலோசித்துக் கொண்டிருக்கிறாயே! பரவாயில்லை. புரிந்து கொள்ள வேண்டுமெனில் அடியேனிடத்தில் சிஷ்யனாக வாரும்’’என்றே அழைத்து விட்டார்.
உடனே, எம்பெருமானுக்கு திருமங்கையாழ்வாரின் பாடல்களை கற்க பேராவல் பொங்கியது. இதற்காகவே பெரியவாச்சான் பிள்ளை என்கிற மேதாவியாக அவதாரம் செய்தார். இவருக்கு கற்றுக் கொடுப்பதற்காக திருமங்கையாழ்வாரே நம்பிள்ளையாகவும் அவதரித்தார். ஆவணி மாத ரோகிணியில்தான் கண்ணபிரான் அவதரித்தான். அதே ரோகிணி நட்சத்திரத்தில் பெருமாள், பாடம் கேட்கும் பொருட்டு பெரிய வாச்சான் பிள்ளையாக அவதரித்தார். இவருக்கு பால பிராயத்தில் கிருஷ்ணன் எனும் திருநாமமும் உண்டு.
அதேபோல் கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த திருமங்கையாழ்வார், அதே கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தில் நம்பிள்ளையாக அவதரித்தார். என்னவொரு பொருத்தம்! பக்தவத்சலப் பெருமாள், கிழக்கு நோக்கிய நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். பிரமாண்டமான பேரழகு பொருந்திய திருவுருவம். தாயாருக்கு கண்ணமங்கை நாயகி என்று திருப்பெயர். சிவபெருமான் நான்கு உருவமெடுத்து இத்தலத்து நான்கு திக்குகளையும் காத்து வருவதாக ஐதீகமுண்டு. திருவாரூரிலிருந்து வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணங்குடி
» பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணபுரம்
» கிருஷ்ண ஜெயந்தி : கோயில்களில் சிறப்பு பூஜை
» தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்
» சனி பரிகார தலங்கள்
» பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணபுரம்
» கிருஷ்ண ஜெயந்தி : கோயில்களில் சிறப்பு பூஜை
» தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்
» சனி பரிகார தலங்கள்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya