Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


தாமரைக் கண் ஈந்த திருமால்

Go down

தாமரைக் கண் ஈந்த திருமால் Empty தாமரைக் கண் ஈந்த திருமால்

Post by oviya Sun Dec 07, 2014 10:05 am

செங்கல்பட்டு - அரக்கோணம் ரயில் பாதையில் திருமால்பூர் ரயில்நிலையத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் உள்ளது, திருமால்பூர் கோயில். குபன் என்னும் அரசனுக்கு உதவுவதற்காக திருமால், ததீசி முனிவர் மீது தம் சக்ராயுதத்தை ஏவினார். அது அவரது வஜ்ரம் போன்ற உடலைத் தாக்க முடியாமல் சிதைந்தது. அதனால் திருமால் இத்தலத்தை அடைந்து, அம்பிகை பூஜித்த மணலால் ஆன மணிகண்டேஸ்வரரை தினமும் ஆயிரம் தாமரைப்பூக்களால் அர்ச்சித்து தன் சக்ராயுதத்தை மீட்டு அருள வேண்டினார். அவரின் பக்தியை சோதிக்க எண்ணிய ஈசன், ஒரு நாள் அந்த ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைந்துபோகச் செய்தார். ஒரு மலர் குறைவதைக் கண்ட திருமால், மலர் போன்ற தன் கண்ணை அப்படியே அகழ்ந்து எடுத்து ஈசனை அர்ச்சித்தார்.

ஈசன் அவரை, ‘செந்தாமரைக் கண்ணா’ என்றழைத்து மகிழ்ந்து, சக்ராயுதத்தையும் மீட்டுத் தந்தார். தனக்கு அருள்புரிந்தது போல் இத்தலத்தை தரிசிப்பவர் அனைவருக்கும் அருள் புரிய ஈசனை திருமால் கேட்டுக் கொண்டார். பிறகு, ஈசன் கருவறையின் முன் நந்தியின் பின்னால் ஈசனை நோக்கி கை கூப்பிய நிலையில் நிலை கொண்டார் என காஞ்சிப்புராணம் கூறுகிறது. ஹரியான திருமால் பேறு பெற்றதால் திருமால்பேறு என்றும், ஹரிசக்ரபுரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. கண் நோய்களை நீக்கும் நிகரற்ற தலம் இது.

திருமீயச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள், காஞ்சியில் காமாட்சி முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்ரத்தில் வீற்றிருந்து அருள்கின்றனர். அந்த வசின்யாதி வாக்தேவதைகள் இந்த தலத்தில் தேவி நின்றருளும் பீடத்திலும் வரிசையாக வீற்றிருப்பது மிகவும் அரிதான காட்சி. பௌர்ணமி அன்று ஊஞ்சல் உற்சவமும், வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகளும் இந்த அன்னைக்கு நடக்கின்றன. அன்னை சந்நதியின் அர்த்த மண்டபத்தில் மீன் உருவங்கள் நிறையக் காணப்படுகின்றன. மீன ராசி அன்பர்களின் பரிகாரத்தலமாக இந்த சந்நதி போற்றப்படுகிறது. ஆலயத்தில் பூஜைகள் அனைத்தும் ஈசன், நடராஜப்பெருமான், திருமால் மூவருக்கும் சேர்த்தே நடைபெறுகின்றன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum