Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

Go down

மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் Empty மதுரை சித்திரை திருவிழா கோலாகலம் : பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர் ; லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

Post by oviya Sun Dec 07, 2014 3:17 pm

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை விமரிசையாக நடந்தது. பச்சை பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி அழகர் ஆற்றில் இறங்கினார். லட்சக்கணக்கான பக்தர்கள் இதை தரிசித்தனர். மதுரை சித்திரை திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு விழா, மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 23-ம் தேதி மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும் நேற்று தேரோட்டமும் நடந்தது. மீனாட்சி கோயில் திருவிழா இன்றுடன் நிறைவடைந்தது. இதற்கிடையே, அழகர்கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். வழி நெடுகிலும் பக்தர்கள் அமைத்திருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளினார். மதுரை வந்த கள்ளழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்சேவை செய்து வணங்கி அழைத்து வந்தனர். 

நேற்றிரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்த அழகர், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 12.30 மணிக்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். அதிகாலை முதலே வைகை ஆற்றில் பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். வழி நெடுகிலும் 410 மண்டகப்படிகளில் எழுந்தருளிய அழகர், காலை 7.35 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி, தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என விண்ணதிர முழக்கமிட்டனர். அழகரை வீரராகவப் பெருமாள் வரவேற்றார். பின்னர் சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடந்தது. அங்கிருந்து 8.40 மணிக்கு அழகர் மீண்டும் புறப்பட்டு ராமராயர் மண்டபம் சென்றார். அப்போது அழகர் மீது பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும் அழகர் போல வேடமணிந்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம்
» காரணீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்
» மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
» கொள்ளிடம் ஆற்றில் கோலாகலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை சமயபுரம் மாரியம்மன் பெற்றார்
» மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum