Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கல்வி வரமருளும் முப்பெருந்தேவியர்

Go down

கல்வி வரமருளும் முப்பெருந்தேவியர் Empty கல்வி வரமருளும் முப்பெருந்தேவியர்

Post by oviya Tue Dec 09, 2014 1:43 pm

சென்னை-பழைய மாமல்லபுரம் சாலையில், தாழம்பூர் கிருஷ்ணாநகரில் உள்ளது, திரிசக்தி அம்மன் திருக்கோயில். மூன்று கருவறைகளில் ஞான சக்தி, கிரியா சக்தி, இச்சா சக்தி ஆகிய மூன்று சக்திகளும் தனித்தனியாக கொலுவிருந்து, ஒரே கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு. இங்குள்ள மூன்று தேவியரையும் வழிபட கல்வி, செல்வம், மனவலிமை போன்றவற்றில் சிறந்து விளங்கலாம். இங்கு திருவருள் புரியும் ஞான சரஸ்வதி நான்கு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள்.

இடது கீழ் கரத்தில் ஓலைச்சுவடியும் வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும் காட்டி தரிசனம் தருகிறாள். இவளைப் போற்றிப் பணிய, படிப்பாற்றலும், படைப்பாற்றலும் மேலோங்குகிறது. இவளை அடுத்து கிரியா சக்தியாகத் திகழும் மூகாம்பிகை அமர்ந்துள்ளாள். பத்மாசனத்தில் அமர்ந்திருக்கும் இவள், மேலிரு கரங்களில் சங்கு சக்கர மும், கீழ் வல இடக்கரங்களில் சின்முத்திரையும் வரத ஹஸ்தமும் கொண்டிருக்கிறாள்.

மூகாம்பிகையின் அருட்பார்வை செயல் முடிக்கும் ஆற்றல், மனவலிமையைத் தரும்; அச்சத்தை போக்கும். அடுத்து இச்சா சக்தியாகிய லட்சுமி தேவி அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் தாமரை மொட்டுகளைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய-வரத ஹஸ்தம் காட்டி புன்னகை தவழப் பொலிகிறாள். பாற்கடலில் பிறந்த பாவையான இவள், கடலைப் போன்றே வற்றாத வளம் தருபவள். அன்னையின் அருட்பார்வை செல்வமெல்லாம் தரும். வறுமையை விரட்டும். கல்வியுடன் வீரமும் செல்வமும் வந்து சேரும் என்பதை நிரூபிப்பதுபோல் இந்த மூன்று அன்னையரையும் தரிசிப்போர் சகல மங்களங்களையும் பெறுவது நிச்சயம்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum