Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு

Go down

சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு Empty சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு

Post by oviya Sun Nov 30, 2014 2:16 pm

குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணைஆணையர் ஞானசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் சபரிமலை சீசனையொட்டி சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க திருக்கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து உள்ளது. அதன்படி கோவில் வெளி சுற்றுப்பிரகாரத்தில் கூடுதல் குடிதண்ணீர் வசதி, பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது வெளிப்பிரகாரத்தில் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்கு சிறப்பு வசதிகள், கூட்ட நெரிசல் தவிர்ப்பதற்காக கூடுதல் கியூசெட் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் பகதர்களுக்கு திரிவேணி சங்கம கடற்கரையில் கட்டண கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. சீசனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் பக்தர்களின் வசதிக்காகவும் பகவதிஅம்மன் கோவில் நடைதிறக்கும் நேரம் கூடுதலாக 1 மணி நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது கோவில்நடை அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுகிறது.

மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. சீசனையொட்டி பகல் 12.30 மணிக்கு நடை அடைப்பதற்கு பதிலாக மதியம் 1 மணிக்கு அடைக்கப் படும். மாலை 4 மணிக்கு திறக்கப்படுவதற்கு பதில் முன்கூட்டியே 3.30 மணிக்கே நடை திறக்கப்படும்.

மேலும் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் சீசனையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகளவில் இருப்பதால் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணிக்காக மற்ற கோவில்களில் இருந்து கூடுதல் திருக்கோவில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் ஷிப்டு முறையில் பணியாற்றுவார்கள்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தை சுற்றி 4 புறமும் சுற்றுப்பிரகார மண்டபம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் கன்னியாகுமரிவிவேகானந்தபுரம் சநதிப்பில் அமைந்து உள்ள சக்கர தீர்த்தகுளம் அருகே திருக்கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தில் ரூ. 1 கோடி செலவில் 48 கடைகள் கொண்ட வணிக வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சபரிமலையில் முதல் நாளிலேயே அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: தரிசன நேரம் அதிகரிப்பு
» கனமழையிலும் கட்டுக்கடங்காத கூட்டம் : சபரிமலையில் தரிசன நேரம் அதிகரிப்பு
» பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
» தமிழகத்திலுள்ள சிவாலயங்களில் ஆருத்ரா தரிசன விழா : பக்தர்கள் தரிசனம்
» திருப்பதியில் அலைமோதும் கூட்டம் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum