Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தீராத சிக்கலையும் தீர்த்து வைக்கும் திருமலைக் குமரன்

Go down

தீராத சிக்கலையும் தீர்த்து வைக்கும் திருமலைக் குமரன் Empty தீராத சிக்கலையும் தீர்த்து வைக்கும் திருமலைக் குமரன்

Post by oviya Wed Dec 10, 2014 1:37 pm

மாயன் முருகனின் ஆலயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பண்பொழி கிராமத்தில் 400 அடி உயரத்தில் மலைக்குன்றில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்குச் செல்ல பண்பொழி கிராமத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்துதான் விநாயகர் கோயில் வழியாக மலை ஏறிச்செல்ல படிக்கட்டு ஆரம்பிக்கிறது. கீழே வல்லப விநாயகர் தாயை மடியில் தாங்கியபடி உள்ளார். இவருக்கு தேங்காய் விடலை போட்டு விட்டு நம் வேண்டுதலை அவரிடம் கூறலாம். அவருக்கு வலது புறம் மீனாட்சி சமேத திருமலை சுந்தரேஸ்வரரையும் வணங்கலாம். அங்கு சிறு மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் முருகனின் பாதம் உள்ளது.

அகில உலகத்திற்கும் அருள்பாலிக்கும் முருகன் திருப்பாதத்தினையும் வணங்கி விட்டு படியேறுவது மரபு. படிகளில் ஏறும் போதே நடுவட்டி விநாயகர், முருகன்-வள்ளி-தெய்வானை, இடும்பன் சந்நதிகள் உள்ளன. கருவறையில் புன்சிரிப்போடு அழகன் முருகன் திருமலைக் குமாரசாமி எனும் திருப்பெயரோடு காட்சி தருகிறார். மூங்கில் காட்டில் அவரை கண்டெடுக்கும்போது ஆயுதம் பட்டதால் மூக்குப் பகுதி சிறிது சிதிலமடைந்த நிலையில் இருந்தாலும் அதுவே அவருக்கு அழகாகிவிட்டதைப் போன்றுதான் தோன்றுகிறது.

இத்தலத்தில் ஊறும் சுனைக்கு அஷ்ட பத்மக் குளம் என்ற பெயர். இதில் நீராடி திருமலை முருகனை வழிபட்டு வருபவரின் நோய் நொடி நீங்கி, உற்சாகமாக நூறாண்டு வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் பண்பொழி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள இக்கோயிலுக்கு வரலாம். பஸ், ஆட்டோ வசதி உண்டு.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum