திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரரை அலங்கரித்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் அருகே கொண்டு வந்தனர். பின்னர் மகாதீபாராதனை நடந்தது.
அதிகாலை 6 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் படிக்க, கோயில் பெரிய பட்டம் ஹாலாசியநாதன், தியாகராஜன் குருக்கள் தலைமையில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ், வைத்தியநாதன், கீர்த்திவாசன், கோட்டி, கார்த்திகேயன், சங்கர், ராஜேஷ் குருக்கள் 61 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றினர். பக்தர்கள் ‘‘அண்ணாமலையாருக்கு அரோகரா‘‘ என பக்தி முழக்கமிட்டனர். கொடியேற்றத்தை காண கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
முதல் நாளான இன்று பகல் பஞ்ச மூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி அதிகாரநந்தி, ஹம்சம், சிம்ம வாகனங்களில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வரும் 13ம் தேதி பகலில் 63 நாயன்மார்கள் ஊர்வலமும், இரவில் வெள்ளிரத ஊர்வலமும் நடக்கிறது. 14ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. வரும் 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அண்ணாமலையார், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவமூர்த்திகளான விநாயகர், முருகர், உண்ணாமலை சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரரை அலங்கரித்து மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் அருகே கொண்டு வந்தனர். பின்னர் மகாதீபாராதனை நடந்தது.
அதிகாலை 6 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் படிக்க, கோயில் பெரிய பட்டம் ஹாலாசியநாதன், தியாகராஜன் குருக்கள் தலைமையில் இளவரசு பட்டம் பி.டி.ரமேஷ், வைத்தியநாதன், கீர்த்திவாசன், கோட்டி, கார்த்திகேயன், சங்கர், ராஜேஷ் குருக்கள் 61 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றினர். பக்தர்கள் ‘‘அண்ணாமலையாருக்கு அரோகரா‘‘ என பக்தி முழக்கமிட்டனர். கொடியேற்றத்தை காண கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டிருந்தனர்.
முதல் நாளான இன்று பகல் பஞ்ச மூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி அதிகாரநந்தி, ஹம்சம், சிம்ம வாகனங்களில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வரும் 13ம் தேதி பகலில் 63 நாயன்மார்கள் ஊர்வலமும், இரவில் வெள்ளிரத ஊர்வலமும் நடக்கிறது. 14ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறுகிறது. வரும் 17ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படுகிறது.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம்
» திருவண்ணாமலை கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் துவங்கியது
» திருவண்ணாமலை திக்குமுக்காடியது : 20 லட்சம் பேர் மகா தீப தரிசனம்
» திருவண்ணாமலை கோயிலில் 17ம் தேதி தீபத் திருவிழா
» தி.மலை தீபத்திருவிழா நிறைவு : அண்ணாமலையார் கிரிவலம் ஏராளமான பக்தர் தரிசனம்
» திருவண்ணாமலை கோயிலில் ஆனி பிரம்மோற்சவம் துவங்கியது
» திருவண்ணாமலை திக்குமுக்காடியது : 20 லட்சம் பேர் மகா தீப தரிசனம்
» திருவண்ணாமலை கோயிலில் 17ம் தேதி தீபத் திருவிழா
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya