Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்கு திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு

Go down

புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்கு திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு Empty புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்கு திருப்பதியில் சிறப்பு ஏற்பாடு

Post by oviya Thu Dec 11, 2014 2:13 pm

புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா நாட்களில் திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புத்தாண்டு மற்றும் ஜனவரி 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு விஐபிக்கள் அனுமதிக்கப்படுவார்கள். விஐபிக்கள் அனைவருக்கும் லகுதரிசனத்தில் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். ஒரு விஐபியுடன் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஒரு டிக்கெட் விலை ரூ.1,000.அன்றைய தினம் விஐபிகள் அளிக்கும் சிபாரிசு கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சுவாமி தரிசனத்துக்கு வரும் விஐபிக்கள் தங்கள் அடையாள அட்டையை கட்டாயமாக கொண்டு வரவேண்டும்.

இலவச தரிசனத்தில் வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு திருமலையில் உள்ள எம்பிசி அலுவலகத்தில் இருந்து வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஜனவரி 1ம் தேதி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினம் 20 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு ஜனவரி 10ம் தேதி இரவு முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அன்றைய தினம் 22 ஆயிரம் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வார்கள். அலிபிரி மலைப்பாதையில் நடந்துவரும் பக்தர்கள் ஜனவரி 1ம் தேதி தரிசனத்துக்கு வரும் 31ம் தேதி இரவு 12 மணி முதல் நாராயணகிரி பூங்கா வரிசையில் வர வேண்டும். ஜனவரி மாதம் 10ம் தேதி மலைப்பாதையில் நடந்து வரும் காளிகோபுரம் அருகே திவ்ய தரிசன டிக்கெட்டுகள் பிற்பகல் 2 மணிக்கு வழங்கப்படும்.

ஸ்ரீவாரிமெட்டு வழியாக நடந்துவரும் பக்தர்களுக்கு காலை 6 மணிக்கு பிறகு தரிசன டிக்கெட் வழங்கப்படும். ஜனவரி 1ம் தேதி தரிசனத்துக்கு 25 ஆயிரம் டிக்கெட்டும், வைகுண்ட ஏகாதசிக்கு 30 ஆயிரம் டிக்கெட் வழங்கப்பட்ட உள்ளது. ரூ.50 சுதர்ஷன டிக்கெட் ஜனவரி 1ம் தேதிக்கு ஏற்கனவே 4,800 டிக்கெட்டுகள் தேவஸ்தான தகவல் மையங்களில் வழங்கப்பட்டுள்ளது. ரூ.300 சிறப்பு டிக்கெட் ஜனவரி 1ம் தேதி மற்றும் 11 ம் தேதிகளில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 12ம் தேதி துவாதசியன்று 5 ஆயிரம் ரூ.300 சிறப்பு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர், ஒரு வயது குழந்தையுடன் வரும் பெற்றோர் அனுமதிக்கப்படும் தரிசனங்கள் ஜனவரி 1, 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் அன்றைய தினங்களில் ஆர்ஜித சேவைகள், தங்கும் அறைகள் முன்பதிவும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» அண்ணாமலையார் கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தில் பக்தர் தரிசனத்துக்கு வசதி
» இன்று பக்ரீத் பண்டிகை : பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடு
» புத்தாண்டு கொண்டாட்டம் : தேவாலயம், கோயில்களில் சிறப்பு வழிபாடு
» திருப்பதியில் 15 மணி நேரத்தில் 42,188 பக்தர்கள் சுவாமி தரிசனம்
» 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசி : ஏழுமலையான் கோயிலில் சிறப்பு சேவைகள் ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum