கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு தீர்த்தவாரி
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
கலசபாக்கம் : ரத சப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலையை அடுத்துள்ள கலசபாக்கத்தில் ரதசப்தமி ஆற்றுத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். செய்யாறில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு திருவண்ணாமலை கோயிலில் இருந்து உண்ணாமுலையம்மை, சமேத அண்ணாமலையார் பல்லக்கில் அழைத்து வருவது வழக்கம்.
இந்த ஆண்டு தீர்த்தவாரி விழாவையொட்டி நேற்று காலை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனக்கோட்டிபுரம் வந்தார். பின்னர், அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கிரிவலம் நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்ட சுவாமிக்கு கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அண்ணா மலையார் கலசபாக்கத்தில் உள்ள செய்யாற்றை வந்தடைந்தார்.
அதேபோல் கலசபாக்கத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திரிமாமூடிஸ்வரர் கோயிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் புறப்பட்டு செய்யாற்றை வந்தடைந்தனர். தொடர்ந்து செய்யாற்றில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்ட மெகா பந்தலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
இன்று காலை அண்ணாமலையார், திரிமாமூடிஸ்ரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ருக்கு யானை மிஸ்சிங் ஆண்டுதோறும் ஆற்று திருவிழாவின் போது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு கலசபாக்கத்துக்கு ஊர்வலமாக வருவது வழக்கம். அப்போது ஏராளமான பக்தர்கள் யானையிடம் ஆசி பெறுவர். ஆனால் இந்த ஆண்டு யானை ருக்கு புத்துணர்வு முகாமிற்கு சென்று நேற்று முன்தினம் வந்ததால் ஆற்று திருவிழாவுக்கு அழைத்து வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அருகே உள்ள கலசபாக்கத்தில் ரதசப்தமியையொட்டி நேற்று நடந்த ஆற்று திருவிழாவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், திரிபுரசுந்தரி சமேத திருமாமூடிஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கலசபாக்கம் : ரத சப்தமியையொட்டி கலசபாக்கம் செய்யாற்றில் அண்ணாமலையாருக்கு நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலையை அடுத்துள்ள கலசபாக்கத்தில் ரதசப்தமி ஆற்றுத்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். செய்யாறில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு திருவண்ணாமலை கோயிலில் இருந்து உண்ணாமுலையம்மை, சமேத அண்ணாமலையார் பல்லக்கில் அழைத்து வருவது வழக்கம்.
இந்த ஆண்டு தீர்த்தவாரி விழாவையொட்டி நேற்று காலை உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக துரிஞ்சாபுரம் ஒன்றியம் தனக்கோட்டிபுரம் வந்தார். பின்னர், அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கிரிவலம் நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்ட சுவாமிக்கு கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அண்ணா மலையார் கலசபாக்கத்தில் உள்ள செய்யாற்றை வந்தடைந்தார்.
அதேபோல் கலசபாக்கத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திரிமாமூடிஸ்வரர் கோயிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் புறப்பட்டு செய்யாற்றை வந்தடைந்தனர். தொடர்ந்து செய்யாற்றில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்ட மெகா பந்தலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
இன்று காலை அண்ணாமலையார், திரிமாமூடிஸ்ரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ருக்கு யானை மிஸ்சிங் ஆண்டுதோறும் ஆற்று திருவிழாவின் போது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு கலசபாக்கத்துக்கு ஊர்வலமாக வருவது வழக்கம். அப்போது ஏராளமான பக்தர்கள் யானையிடம் ஆசி பெறுவர். ஆனால் இந்த ஆண்டு யானை ருக்கு புத்துணர்வு முகாமிற்கு சென்று நேற்று முன்தினம் வந்ததால் ஆற்று திருவிழாவுக்கு அழைத்து வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அருகே உள்ள கலசபாக்கத்தில் ரதசப்தமியையொட்டி நேற்று நடந்த ஆற்று திருவிழாவில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், திரிபுரசுந்தரி சமேத திருமாமூடிஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் குப்தமங்கை தீர்த்தவாரி நாளை நடக்கிறது
» குடந்தை மகாமக குளத்தில் வரும் 15ம் தேதி தீர்த்தவாரி
» புதுவையில் மாசிமக தீர்த்தவாரி கடற்கரையில் குவிந்தனர் பக்தர்கள்
» ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவிலில் குப்தமங்கை தீர்த்தவாரி நாளை நடக்கிறது
» குடந்தை மகாமக குளத்தில் வரும் 15ம் தேதி தீர்த்தவாரி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya