Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கொஸ்லாந்த மீரியபெத்த மக்களுக்கு கிளிநொச்சி ஜெயந்திநகரில் அஞ்சலி

Go down

கொஸ்லாந்த மீரியபெத்த மக்களுக்கு கிளிநொச்சி ஜெயந்திநகரில் அஞ்சலி Empty கொஸ்லாந்த மீரியபெத்த மக்களுக்கு கிளிநொச்சி ஜெயந்திநகரில் அஞ்சலி

Post by oviya Mon Dec 01, 2014 1:19 pm

கிளிநொச்சி ஜெயந்திநகர் அம்மன் ஆலயத்தில் மலையகம் கொஸ்லாந்த மீரியபெத்த மண்சரிவினால் மரணித்த மக்களுக்கு மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்குபடுத்தலில் சுடரேந்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன், கட்சியின் ஜெயந்திநகர் செயற்பாட்டாளரும் சமூக சேவகருமான சந்திரன், கட்சியின் செயற்பாட்டாளர் மகேஸ்,

வடமராட்சி கிழக்கு கட்சி அமைப்பாளர் சூர்யா. மாற்றுவலுவுள்ளோர் அமைப்பின் இணைப்பாளர், சாந்தி கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மக்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.

மேலும், மரணித்த மக்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண சபையின் விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

நூற்றாண்டுகளாக அடிமை வாழ்வை சுமந்துநிற்கும் உறவுகளாக மலையகப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் இன்றுவரை துன்பங்களை சுமந்து வாழ்கின்றவர்களாக இருக்கின்றனர்.

இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு தங்கள் வியர்வையால் காலாதிகாலமாக பெரும் பங்களிப்பை ஆற்றிவரும் இந்த மலையக மக்களுக்கு இயற்கையாலும் பாதுகாப்பற்ற வாழ்வு அமைந்து மீரியபெத்த கொஸ்லாந்த துன்பம் வரை கொண்டுசென்றுள்ளது.

மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது சமுகம் பற்றிய விழிப்புண்வை ஏற்படுத்த முனைகின்ற சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கங்களால் அவர்களின் புரட்சிகர எண்ணங்கள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கிலே நடந்த புரட்சிகர போராட்திலே ஏராளம் மலையகத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகள் தங்கள் இன்னுயிர்களை தந்துள்ளார்கள்.

ஆகவே இடர்களின் மேல் வாழந்துவரும் மலையக மக்களுக்கு ஒரு சூரியன் உதிக்க வேண்டுமென இன்று ஏக்கம் இருக்கின்றது.

அம்மக்களின் உணர்வு எங்களுடைய உணர்வு.அவர்கள் நாங்களும் இரண்டற கலந்தவர்கள் என தெரிவித்தார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» சோதனையும் வேதனையும் மீரியபெத்த மக்களை துரத்துகின்றது – மலையகத் தலைமைகளோ மௌனம்!
» மக்களுக்கு மகிழ்ச்சி பெருக்கும் ஐஸ்வர்யம் தரும் ஆடி 18
» வருமானம் குறைந்த மக்களுக்கு வடக்கு முதலமைச்சரால் வாழ்வாதார உதவி!
» வட பகுதி பொதுமக்களிடம் இராணுவம் பிடித்த காணிகளை மீள மக்களுக்கு கையளியுங்கள்: அமைச்சர் வாசுதேவ
» புதிய அரசு தமிழ் மக்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கும்! மைத்திரியால் தீர்வு எட்டப்படும்!- சோபித தேரர் உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum