திருச்செந்தூரில் இன்று சூரனை வதம் செய்ய சிக்கலில் அன்னையிடம் வேல் வாங்கிய சிங்காரவேலர்
Page 1 of 1
திருச்செந்தூரில் இன்று சூரனை வதம் செய்ய சிக்கலில் அன்னையிடம் வேல் வாங்கிய சிங்காரவேலர்
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
வேல்நெடுங்கண்ணி அம்மன் கொடுத்த சக்தி வேலால் தான் முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்காரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி பெருவிழாவில் சிங்காரவேலர், வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அம்மனிடம் இருந்து சக்திவேலை பெறும்போது சிங்காரவேலரின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வைத்துளிகள் சிந்தும். இந்த அற்புத காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சிக்கலில் கூடுவார்கள்.
அதேபோல இந்த ஆண்டு வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து சிங்காரவேலர் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சக்தி வேலை வாங்கியபோது சிங்காரவேலரின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வைத்துளிகள் சிந்தின. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சரணகோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேலு, நிர்வாக அதிகாரி ராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
நாகை மாவட்டம் சிக்கலில் நவநீதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருகன் சிங்காரவேலர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவினை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
வேல்நெடுங்கண்ணி அம்மன் கொடுத்த சக்தி வேலால் தான் முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்காரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. ஆண்டுதோறும் இக்கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி பெருவிழாவில் சிங்காரவேலர், வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அம்மனிடம் இருந்து சக்திவேலை பெறும்போது சிங்காரவேலரின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வைத்துளிகள் சிந்தும். இந்த அற்புத காட்சியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சிக்கலில் கூடுவார்கள்.
அதேபோல இந்த ஆண்டு வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து சிங்காரவேலர் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சக்தி வேலை வாங்கியபோது சிங்காரவேலரின் முகத்தில் முத்துமுத்தாக வியர்வைத்துளிகள் சிந்தின. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் சரணகோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேலு, நிர்வாக அதிகாரி ராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» கழுகுமலையில் கந்தசஷ்டி: கழுகாசலமூர்த்தி, தாரகாசூரனை வதம் செய்தார்
» கந்தசஷ்டி விழா: சிக்கல் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி 28–ந்தேதி நடக்கிறது
» முருகன் கேட்டு வாங்கிய வைர பதக்கம்
» என்னை கொலை செய்ய முயற்சிக்கப்படுகின்றது!– பிரசன்ன சோலங்காராச்சி
» மஹிஷாசுரனை வதம் செய்த வராஹி அம்மன்
» கந்தசஷ்டி விழா: சிக்கல் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி 28–ந்தேதி நடக்கிறது
» முருகன் கேட்டு வாங்கிய வைர பதக்கம்
» என்னை கொலை செய்ய முயற்சிக்கப்படுகின்றது!– பிரசன்ன சோலங்காராச்சி
» மஹிஷாசுரனை வதம் செய்த வராஹி அம்மன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya