Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கந்தசஷ்டி விழா: சிக்கல் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி 28–ந்தேதி நடக்கிறது

Go down

கந்தசஷ்டி விழா: சிக்கல் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி 28–ந்தேதி நடக்கிறது Empty கந்தசஷ்டி விழா: சிக்கல் சிங்காரவேலர் வேல் வாங்கும் நிகழ்ச்சி 28–ந்தேதி நடக்கிறது

Post by oviya Mon Dec 01, 2014 2:16 pm

நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் நவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் முருகன் சிங்காரவேலர் என்ற பெயரில் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

மகா அசுரனான சூரன், மக்களுக்கு பல இன்னல்களை கொடுத்து வந்ததால் சூரனை வதம் செய்வதற்காக இந்த கோவிலில் பார்வதி தேவி சிங்காரவேலவருக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் வேல்நெடுங்கன்னி அம்மன் என்று பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த கோவில் 64 சக்திபீடங்களில் ஒன்றாகும்.

இந்த கோவிலில் உள்ள நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து சக்திவேல் வாங்கிய உடன் சிங்காரவேலவருக்கு மானிடருக்கு வியர்ப்பது போல் வியர்ப்பது அபூர்வமான காட்சியாகும். இந்த கோவிலில் நெடுங்கன்னி அம்மனிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

இவ்வாறு பல்வேறு புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நேற்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், சுந்தர கணபதிக்கு அபிஷேக ஆராதனை, விக்னேஸ்வர பூஜை, மிருத்சங்கிரகணம், அங்குரார்பணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து நேற்று இரவு சிங்காரவேலவர் தங்க மஞ்சத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாக்காலங்களில் தொடர்ந்து வேலவர் பவள ஆட்டுகிடா வாகனம், தங்கமயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், தங்க ஆட்டுகிடா வாகனம், இந்திர விமானம், வெள்ளி ரதம், புஷ்ப பல்லக்கு ஆகியவற்றில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் சக்திவேல் வாங்குதல், சிங்காரவேலவருக்கு வியர்வை சிந்தும் காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் வருகிற 28–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணி அளவில் சிங்காரவேலர் தேரில் சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளுகிறார். காலை 7.30 மணி அளவில் தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதைதொடர்ந்து சக்திவேல், வேல்நெடுங்கன்னி அம்மனுக்கு மகா அபிசேகம் நடக்கிறது. இரவு 7.30 மணி அளவில் சிங்காரவேலர், தேரில் இருந்து கோவிலுக்கு எழுந்தருளி வேல் நெடுங்கன்னி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதைத்தொடர்ந்து 29–ந்தேதி சண்முகார்ச்சனை, சூரசம்காரம், 30–ந்தேதி தெய்வானை திருக்கல்யாணம், 31–ந்தேதி வள்ளித் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து நவம்பர் மாதம் 1–ந்தேதி விடையாற்றி உற்சவமும், சயன அலங்காரத்தில் எழுந்தருளலும் நடக்கிறது. 2–ந்தேதி சர்வபிராயச்சித்த அபிசேகம், யதாஸ்தான பிரவேசத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேலு, நிர்வாக அதிகாரி ராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருவிடைமருதூர் மீனாட்சி–சொக்கநாதர் கோவில் கும்பாபிஷேகம் 30–ந்தேதி நடக்கிறது
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழா
» திருச்செந்தூரில் இன்று சூரனை வதம் செய்ய சிக்கலில் அன்னையிடம் வேல் வாங்கிய சிங்காரவேலர்
» ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் நிகழ்ச்சி இன்று இரவு நடக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum