Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது

Go down

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது Empty திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது

Post by oviya Tue Dec 02, 2014 1:35 pm

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. அங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா, நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி நாளை அதிகாலை 2 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலைக்கு புறப்படுகிறார். அங்கு சிறப்பு பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

1ம் திருநாள் முதல் 6ம் திருநாள் வரை காலையில் வேள்வி பூஜை நடைபெறும். பகலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறார். பின்னர் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் மேள வாத்தியங்களுடன், சண்முக விலாசம் சேர்கிறார். அங்கு தீபாராதனை நடைபெறும்.

1ம் திருநாள் முதல் 5ம் திருநாள் வரை மாலை 4.30 மணியளவில், திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

6ம் திருநாளான வருகிற 29ந் தேதி (புதன்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும். அன்று சூரசம்ஹாரம் நடக்கிறது. 29ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணி அளவில் யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது.
பின்னர் வேள்விசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். தீபாராதனைக்கு பின்னர் சுவாமி திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சூரசம்ஹாரத்துக்கு பின்பு சந்தோச மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் கிரிப்பிரகார உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.
மறுநாள் 30ந் தேதி அதிகாலை 5 மணி அளவில் அம்பாள் சேர்க்கையில் இருந்து தவசு காட்சிக்கு புறப்படுகிறார். காலை 10 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
» சங்கனூர் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
» கீழ வண்ணான்விளை முத்தாரம்மன் கோவிலில் நாளை தொடங்குகிறது நவராத்திரி விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum