Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது

Go down

பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது Empty பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது

Post by oviya Tue Dec 02, 2014 1:54 pm

முருகப்பெருமான், சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்த நாள்தான் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் பங்கேற்று தரிசனம் செய்ய கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பழனிக்கு திரளான பக்தர்கள் வருவார்கள். பழனி கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வரும் 24–ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

அன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா தொடங்குகிறது.

சாமிக்கு காப்பு கட்டுதலுடன் ஏராளமான பக்தர்களும் காப்புகட்டி விரதத்தை தொடங்குகின்றனர். அப்போது சுப்பிரமணியர் வள்ளி, தெய் வானையுடன் யாகசாலையில் எழுந்தருள்வார். மாலையில் கார்த்திகை மண்டபத்தில் சிறப்பு ஆன்மிகச் சொற் பொழிவுகள் நடைபெறுகின்றன. இந்த விழா நாட்களில், பக்தர்கள் தொடர்ந்து ஏழு நாள் விரதம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்வர்.

7–ம் நாளான வரும் 29–ந்தேதி வாழைத்தண்டு விரதத்துடன் பக்தர்கள் கந்தசஷ்டி விரதத்தை முடிப்பார்கள். விரதத்தை முடிப்பதற்காக பக்தர்கள் குழுவாக மண்டபங்களில் அமர்ந்து, வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து, நைவேத்திய பிரசாதம் தயாரிப்பர். மலர் அலங்காரத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து, கருவறையில் சாமிக்கு நைவேத்தியம் செய்து வாழைத்தண்டுடன் தயிர் கலந்து பிரசாதத்தை வழங்குவர்.

அன்று மாலை, அடிவாரம் நான்குரதவீதிகளிலும், சூரசம்ஹாரம் நடைபெறும். இதில் பத்மாசூரன், கதமுகாசூரன், சிங்கமுகாசூரன், பானு கோபன் ஆகிய சூரன்களை சுப்பிரமணியர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

மறுநாள் 30–ந்தேதி முத்துக்குமாரசாமி, வள்ளி–தெய்வானைக்கு திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது. கந்தசஷ்டி விழாவையொட்டி, பழனி தேவஸ்தானம் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், தங்கும்விடுதிகள், பூஜை ஏற்பாடுகளை செய்து வருகிறது.

மலைக்கோவிலில் பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனத்துக்கு சிறப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளதாக இணை ஆணையர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருவையாறு கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 24–ந்தேதி தொடங்குகிறது
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா 19–ந்தேதி தொடங்குகிறது
» பழனியில் நாளை கந்தசஷ்டி விழா தொடக்கம்: 29–ந்தேதி சூரசம்ஹாரம்
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum