Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும்

Go down

தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் Empty தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும்

Post by oviya Sun Nov 30, 2014 1:07 pm

இந்து சமயத்திலும், அதன் பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. சில தமிழ் மாதங்களுக்கான பவுர்ணமி நாளின் சிறப்புகளும் விரதங்களும் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன.

* சித்ரா பவுர்ணமி சித்ரகுப்தனின் பிறந்தநாள்.

* வைகாசி பவுர்ணமி முருகனின் பிறந்தநாள்.

* ஆனிப் பவுர்ணமி இறைவனுக்கு கனிகளை படைக்கும்நாள்.

* ஆடிப் பவுர்ணமி திருமால் வழிபாடு

* ஆவணிப் பவுர்ணமி ஓணம், ரக்சாபந்தனம்

* புரட்டாசி பவுர்ணமி உமாமகேசுவர பூசை

* ஐப்பசி பவுர்ணமி சிவபெருமானுக்கு அன்னாபிசேகம்

* கார்த்திகைப் பவுர்ணமி திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு

* மார்கழிப் பவுர்ணமி சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்

* தைப் பவுர்ணமி சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்

* மாசிப் பவுர்ணமி பிரம்மனின் படைப்பு தொழில் துவங்கிய நாள்

* பங்குனிப் பவுர்ணமி சிவபெருமான் உமையம்மை திருமண நாள் திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள் பூரணையும் ஒன்று.

இந்துக்களால் பூரணை சிறந்த தினமாகக் கொள்ளப்படுகிறது. அம்பிகை வழிபாடு பூரணை தினங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பூரணை சித்திராபௌர்ணமி என அழைக்கப்படும். தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருந்து தானதருமம் செய்வது முக்கியமானதாக விளங்குகின்றது.

மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து யமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்திரகுப்தர் அவதரித்த தினம் சித்திராபௌர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானதாக விளங்குகின்றது.

அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள் சித்திராபௌர்ணமி விரதத்தினால் நீங்குகின்றன என்பது நம்பிக்கை. ஒவ்வொரு மாதமும் வரும் திதிகள் ஒரே கால அளவு கொண்டதாக இருப்பதில்லை.

ஒவ்வொரு திதியும் கால அளவில் வித்தி யாசப்படுகின்றன. ஒரே திதியே ஒரு மாதத்தில் நீண்டதாகவும் இன்னொரு மாதத்தில் குறுகியதாகவும் இருக்கின்றது. ஒரே திதி ஒரே மாதத்தில் வளர்பிறைக்காலத்தில் ஒர் கால அளவுக்கும் தேய்பிறைக்காலத்தில் இன்னொரு கால அளவுக்கும் இருக்கின்றது.

நமது கால அளவை துல்லியமான வானியல் கணக்கீட்டை ஆதாரமாகக் கொண்டிருப்பதால்தான் பூமியில் இருந்து சந்திரன் நிற்கும் தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில சமயங் ×-களில் கிட்ட இருக்கும். சில சமயங்களில் தூர விலகிப் போகும். *

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum