Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


சரஸ்வதி வழிபாட்டின் முக்கியத்துவம்

Go down

சரஸ்வதி வழிபாட்டின் முக்கியத்துவம் Empty சரஸ்வதி வழிபாட்டின் முக்கியத்துவம்

Post by oviya Tue Dec 02, 2014 2:14 pm

மகாலட்சுமியைப் போன்றே சரஸ்வதியும் திருப்பாற் கடலிலிருந்து தோன்றியவள். `சரஸ்' என்றால் ஆறு என்று பொருள். `வதி' என்றால் `உறைகின்றவள்' என்று பொருள். ஆக சரஸ்வதி என்ற சொல்லுக்கு ஆற்றங்கரையில் உறைபவள் என்று பொருள். `ச' என்றால் தூய்மை.

`ரஸ' என்றால் `சாரம்', `வதி' என்றால் அமைந்தவள். ஆக சரஸ்வதி என்றால் தூய்மையின் சாரமாக அமைந்தவள் என்று பொருள். `சரஸ' என்றால் தேர்ந்த செயல் `வதி' என்றால் `அமைந்தவள்'. ஆக `சரஸ்வதி' என்றால் தேர்ந்த செயல்களின் வடிவமாக அமைந்தவள் என்று பொருள்.

திருபாற்கடலில் அமுதம் கடைந்த போது தோன்றிய `சரஸ்வதி தேவியை பிரம்மன் மனைவி திருமணம் செய்து கொண்டார். பிரம்மனுக்கு மனைவியானதால் பிராம்மி எனப் பெயர் பெற்றாள். வாக்குக்கு அதிபதியாவதால் `வாக்தேவி' என்னும் பெயர் பெற்றாள். சரஸ்வதி தேவி வேதங்களின் தத்வஸ்ரூபிணி.

அவள் நாத ரூபமாக இருப்பதால் `வாணி' என்னும் பெயர் பெற்றாள். சகலகலாவல்லி என்பதால் `பாரதி' என்னும் பெயர் பெற்றாள். எழுத்துக்களுக்கும், எல்லா தேவைகளுக்கும் பீஜாட்சர ரூபமாய் இருப்பதால் `பீஜாட்சரஸ்வரூபிணி' என்னும் பெயர் பெற்றாள். சரஸ்வதியைப் போற்றி ஒட்டக்கூத்தர் சரஸ்வதி தேவிக்கு கோவில் அமைத்துக் கொண்டாடினார்.

கம்பர் சரஸ்வதியைப் போற்றி சரஸ்வதி அந்தாதி என்னும் முப்பது பாடல்களைப் பாடினார். குமரகுருபரர் சகலகலாவல்லி மாலை என்னும் பத்துப்பாடல்களைப் பாடினார். ஸ்ரீசரஸ்வதி தேவி கல்விக்கு அதிபதி ஆனவன். கல்வி இருக்கும் இடத்தில் கர்வம் இருக்கும் அதைத்தடுக்க அவளே ஞானவடிவாக அமைகிறாள்.

ஞான முத்திரை தரித்து அருள்பாலிக்கிறாள். ஆகவே சரஸ்வதி கல்வியுடன் அடக்கம் தந்து ஞானமும் போதிக்கிறாள். சரஸ்வதிதேவி தலையில் சந்திரக்கலையை அணிந்திருக்கிறாள். சந்திரக்கலை என்பது வளர்ச்சியின் அம்சம். எது வளர்கிறதோ அதற்குக் கலை என்று பெயர். தலையில் சூடிய வளர்பிறைச் சந்திரன் அறிவின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

சரஸ்வதிக்கும் சிவபெருமானைப் போல் நெற்றிக்கண் உண்டு. நெற்றிக்கண் என்பது ஆசையை அழிக்கும் ஞானக்கண். ஆசையை அழித்தால் தான் ஞானம் நிலைபெறும். அதன்படி சரஸ்வதிக்கும் நெற்றிக்கண் என்னும் ஞானக்கண் உண்டு. சரஸ்வதி வெள்ளை நிறம். வெள்ளை நிறம் தூய்மையைக் குறிக்கும்.

குணங்களில் சுத்த சத்வ குணத்தைக் குறிக்கும். மேலும் அந்த வெள்ளை நிறத்தையே ஊடுருவிச் செல்லும் ஸ்படிகத்தை மாலையாகக் கொண்டு அட்சர மாலையாகக் கையில் தரித்திருக்கிறாள். பிரம்ம தேவனுக்கு இரு மனைவிகள், வலப்புறம் அமைந்தவள் சரஸ்வதி, இடப்புறம் சாவித்திரி.

நவராத்திரியின் ஒன்பது நாள் வழிபாட்டில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியையும் இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுகிறோம். இவை முறையே தாமஸ, ரஜோ, ஸத்துவ குணங்களைக் குறிக்கும். தாமஸ குணம் என்பது கோபம் பொருந்திய குணம்.

ஆகவே முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபடுகிறோம். செல்வத்தால் கர்வம் மேலோங்கும். அதைப் போக்க அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியை வழிபாடுகிறோம். இறுதியாக சுத்தமான பரமானந்த நிலையை அடைய சத்துவ குணத்தைப் பெறக் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபடுகிறோம்.

கல்வி என்பது மேதைத் தன்மையையும், புத்தி சாலித்தனத்தையும், வைராக்யத்தையும் குறிக்கும். ஆக சிறந்த அறிவும் புத்திசாலித்தனமும் இல்லாமல் செல்வத்தைப் பெற முடியாது. பெற்ற செல்வத்தை நிலைநிறுத்தவும் முடியாது. உடலில் வீரம் இருந்தால் மட்டும் போதாது.

வீரமில்லாதவன் வீரமுள்ளவளையும் தன் புத்திசாலித்தனத்தால் வீழ்த்தி விடுவாள். ஆகவே, சிறந்த செல்வத்தைப் பெறவும், பெற்ற செல்வத்தை நிலை நிறுத்தவும், வீரத்தைப் பெறவும், எதிரியை வெல்லும் ஆற்றல் பெறவும் கல்வியே மிக அவசியம்.

இவ்வாறாக கல்வி, செல்வம், வீரம் ஆகிய அனைத்தையும் கொடுத்து அதைக் காக்கும் ஒரே தெய்வமாக சரஸ்வதி தேவி விளங்குகிறாள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum