புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் சாமி தரிசனம்
புன்னைநல்லூரில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பூஜைகளும் நடந்தன.
பின்னர் முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், அதைத்தொடர்ந்து முத்துப்பல்லக்கு விடையாற்றி விழாவும் நடந்தது. பின்னர் கொடியேற்றம் நடந்தது. ஆவணி மாதம் ஒவ்வொரு வாரமும், முக்கிய நாட்களிலும் அம்மன் வீதிஉலா நடந்தது. சிம்ம வாகனம், பூத வாகனம், வெள்ளி ரிஷப வாகனத்தில் ஓலைப்பல்லக்கில் அம்மன் புறப்பாடு, யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் வெண்ணைத்தாழி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதன்பின்னர் திருத்தேர் வீதிஉலாவும், விடையாற்றி விழாவும், மஞ்சள் நீர் தீர்த்தவாரியுடன் கொடியிறக்கமும் நடைபெற்றது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா நடந்தது.
இதற்காக மாரியம்மன்கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் அம்மன் வலம் வருவதற்கு வசதியாக மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மிதவை தயாரிக்கப்பட்டு இருந்தது. இரவு பூஜை முடிந்து அம்மன் கோவிலை சுற்றி வலம் வந்தார். பின்னர் அங்கிருந்து அம்மன் ஊர்வலமாக தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிதவையில் வைக்கப்பட்டார். அங்கு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் அம்மன் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், அதைத்தொடர்ந்து முத்துப்பல்லக்கு விடையாற்றி விழாவும் நடந்தது. பின்னர் கொடியேற்றம் நடந்தது. ஆவணி மாதம் ஒவ்வொரு வாரமும், முக்கிய நாட்களிலும் அம்மன் வீதிஉலா நடந்தது. சிம்ம வாகனம், பூத வாகனம், வெள்ளி ரிஷப வாகனத்தில் ஓலைப்பல்லக்கில் அம்மன் புறப்பாடு, யானை வாகனம், சேஷ வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் வெண்ணைத்தாழி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதன்பின்னர் திருத்தேர் வீதிஉலாவும், விடையாற்றி விழாவும், மஞ்சள் நீர் தீர்த்தவாரியுடன் கொடியிறக்கமும் நடைபெற்றது. நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா நடந்தது.
இதற்காக மாரியம்மன்கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் அம்மன் வலம் வருவதற்கு வசதியாக மலர்களாலும், வண்ண மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மிதவை தயாரிக்கப்பட்டு இருந்தது. இரவு பூஜை முடிந்து அம்மன் கோவிலை சுற்றி வலம் வந்தார். பின்னர் அங்கிருந்து அம்மன் ஊர்வலமாக தெப்பக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிதவையில் வைக்கப்பட்டார். அங்கு பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் அம்மன் தெப்பக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்: இன்று மதியம் நடக்கிறது
» திருப்பதியில் 39000 பக்தர்கள் சாமி தரிசனம்
» திருப்பதியில் 20 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
» பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
» அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
» திருப்பதியில் 39000 பக்தர்கள் சாமி தரிசனம்
» திருப்பதியில் 20 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
» பாடாலூரில் மாரியம்மன் கோயில்கள் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
» அத்தனூரம்மன் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya