Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


இன்று விஜயதசமி: பழனி கோவிலில் சூரனை வதம் செய்யும் விழா

Go down

இன்று விஜயதசமி: பழனி கோவிலில் சூரனை வதம் செய்யும் விழா Empty இன்று விஜயதசமி: பழனி கோவிலில் சூரனை வதம் செய்யும் விழா

Post by oviya Fri Dec 05, 2014 12:36 pm

நவராத்திரி விழாவையொட்டி பழனி கோவிலில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று வெகு விமர்ச்சியாக நடைபெறுகிறது.

பழனியில் நடைபெறும் திருவிழாக்களில் நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 24–ந் தேதி தொடங்கிய இத்திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

நவராத்திரியின் வெற்றித்திருநாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு பழனி மலைக்கோவிலில் காலை 5.50 மணிக்கு நடை திறக்கப்பட்டடது.

6 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. காலை 6.40 மணிக்கு விழா பூஜையும், அதனை தொடர்ந்து 8 மணிக்கு சிறுகாலசந்தி மற்றும் 9 மணிக்கு கால சந்தி பூஜைகள் நடைபெற்றன.

இதைத் தொடர்ந்து 12 மணிக்கு உச்சிகால பூஜை, 1½ மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. சரியாக 2.30 மணி அளவில் மூலவர் சன்னதியில் இருந்து சக்திவேல் புறப்பாடு நடைபெற்று நடை சாத்தப்படும்.

சக்திவேல் புறப்பாடானது மலைக்கோவிலில் இருந்து படிப்பாதை வழியாக பாத விநாயகர் கோவிலை வந்தடைந்து அங்கிருந்து பெரியநாயகியம்மன் கோவிலுக்கு செல்லும்.

அங்கு முத்துக்குமாரசாமி தங்க குதிரை வாகனம் புறப்பாடு நடைபெறும். அதனைத் தொடர்ந்து லட்சுமிநாராயண பெருமாளுடன் சக்திவேல் ஊர்வலமாக வந்து கோதை மங்கலம் கோதைஈஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

பின்னர் சக்திவேல் 9 மணி அளவில் மலைக்கோவிலுக்கு சென்று அங்கு சம்ரோஜன பூஜை நடைபெற்று சூரனை வதம் செய்த சக்திவேலுக்கு சாந்தம் அளிக்கப்பட்டு 10 மணி அளவில் ராக்கால பூஜையுடன் நடை சாத்தப்படும். மேலும் இந்த நவராத்திரி விழாவையொட்டி 10 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்க தர புறப்பாடு நாளை முதல் தொடங்கும்.

இன்று விடுமுறை தினம் என்பதாலும், நவராத்திரி விஜயதசமி தினம் என்பதாலும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். மதியம் 3 மணிக்கு நடை சாத்தப்படும் என்பதால் மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருச்செந்தூரில் இன்று சூரனை வதம் செய்ய சிக்கலில் அன்னையிடம் வேல் வாங்கிய சிங்காரவேலர்
» பழனி கோவிலில் கந்தசஷ்டி விழா அக்டோபர் 24–ந்தேதி தொடங்குகிறது
» புத்தேரி ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
» திருச்சானூர் கோவிலில் இன்று பஞ்சமி தீர்த்த விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
» பழனி முருகன் கோவிலில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum