மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது.காலை 9.41 மணியளவில் நடந்த திருக்கல்யாணத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு களித்து மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதரின் அருளைப் பெற்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்றுமுன்தினம் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. நேற்று, அம்மன் எட்டு திக்கையும் வெற்றி கொள்ளும் திக்குவிஜயம் நடந்தது.
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 9.41 மணிக்குள் மிதுன லக்னத்தில் கோலாகலமாக நடந்தேறியது. சுவாமி, பிரியா விடை மற்றும் மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் காலை 4 மணிக்கு அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பையர், கல்யாண சுந்தரமுதலியார் மண்டக படிகளில் எழுந்தருளினர். நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து, பின் முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர்.
காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் உள்ள சடங்கு கந்தரும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாணத்திற்காக எழுந்தருளினர். திருக்கல்யாண மேடை ரூ.2 லட்சம் செலவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்திற்கு காலை 9மணிக்கு சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினார்.
இந்நிகழ்ச்சியில் குல சேகர பட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேஸ்வரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் பூண்டு கல்யாணத்தை நடத்தினர். மீனாட்சி அம்மன் சார்பாக உள்ள சிவச்சாரியார், சாமிக்கு பாதபூஜை செய்தார். பின்னர், காப்பு கட்டிய மோகன் பட்டர் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் செய்தார்.
பின்னர், பாலிய பூஜை, ஹோமம், மாங்கல்ய பூஜை நடந்தது.சுவாமி, பிரியா விடை, அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ந்தது.சுவாமி, அம்பாள் 3முறை மாலை மாற்றி கொண்டனர். சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மனுக்கு பட்டு வஸ்தரம் அணிவிக்கப்பட்டு கெட்டி மேளங்கள், செண்டை மேள, தாளங்கள் ஒலிக்க, சிவச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் சொல்ல முதலில் மீனாட்சி அம்மனுக்கும், பின்னர் பிரியாவிடைக்கும் வைர தாலி அணிவிக்கப்பட்டது.
திருக்கல்யாணத்திற்கு பின்னர், உபச்சார தீபாரதனை முடிந்து, பழைய கல்யாண மண்டபத்திற்கு சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். சுவாமிக்கு கட்டுப்பட்ட பூதத்திற்கு சாப்பாடு போடப்பட்டதாகவும், எல்லா சாப்பாட்டையும் அந்த பூதமே சாப்பிட்டு விட்டதாகவும், தாகம் என்று பூதம் கேட்ட போது, சுவாமி வைகை எனக்கூறி, வைகையை உருவாக்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, கல்யாணம் முடிவடைந்த பின்னர், பழைய கல்யாண மண்டபத்தில் உள்ள அந்த பூதத்தின் சிலைக்கு படையல் போடப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மணமக்களுக்கு திருமாங்கல்யம், பட்டுத்துணிகள், பணம் முதலியவற்றை மொய்யாக வழங்கினர். பக்தர்களுக்கு அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று இரவு 7 மணிக்கு ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர்.
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 9.41 மணிக்குள் மிதுன லக்னத்தில் கோலாகலமாக நடந்தேறியது. சுவாமி, பிரியா விடை மற்றும் மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் காலை 4 மணிக்கு அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பையர், கல்யாண சுந்தரமுதலியார் மண்டக படிகளில் எழுந்தருளினர். நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து, பின் முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினர்.
காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றத்தில் உள்ள சடங்கு கந்தரும், பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாணத்திற்காக எழுந்தருளினர். திருக்கல்யாண மேடை ரூ.2 லட்சம் செலவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டபத்திற்கு காலை 9மணிக்கு சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினார்.
இந்நிகழ்ச்சியில் குல சேகர பட்டர் வழி சிவாச்சாரியார் சுந்தரேஸ்வரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் பூண்டு கல்யாணத்தை நடத்தினர். மீனாட்சி அம்மன் சார்பாக உள்ள சிவச்சாரியார், சாமிக்கு பாதபூஜை செய்தார். பின்னர், காப்பு கட்டிய மோகன் பட்டர் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் செய்தார்.
பின்னர், பாலிய பூஜை, ஹோமம், மாங்கல்ய பூஜை நடந்தது.சுவாமி, பிரியா விடை, அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ந்தது.சுவாமி, அம்பாள் 3முறை மாலை மாற்றி கொண்டனர். சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மனுக்கு பட்டு வஸ்தரம் அணிவிக்கப்பட்டு கெட்டி மேளங்கள், செண்டை மேள, தாளங்கள் ஒலிக்க, சிவச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் சொல்ல முதலில் மீனாட்சி அம்மனுக்கும், பின்னர் பிரியாவிடைக்கும் வைர தாலி அணிவிக்கப்பட்டது.
திருக்கல்யாணத்திற்கு பின்னர், உபச்சார தீபாரதனை முடிந்து, பழைய கல்யாண மண்டபத்திற்கு சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளினர். சுவாமிக்கு கட்டுப்பட்ட பூதத்திற்கு சாப்பாடு போடப்பட்டதாகவும், எல்லா சாப்பாட்டையும் அந்த பூதமே சாப்பிட்டு விட்டதாகவும், தாகம் என்று பூதம் கேட்ட போது, சுவாமி வைகை எனக்கூறி, வைகையை உருவாக்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, கல்யாணம் முடிவடைந்த பின்னர், பழைய கல்யாண மண்டபத்தில் உள்ள அந்த பூதத்தின் சிலைக்கு படையல் போடப்பட்டது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மணமக்களுக்கு திருமாங்கல்யம், பட்டுத்துணிகள், பணம் முதலியவற்றை மொய்யாக வழங்கினர். பக்தர்களுக்கு அன்னதான மண்டபத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று இரவு 7 மணிக்கு ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். திருக்கல்யாணத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் நிலைக்கால் நாட்டுவிழா
» மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
» சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம்
» மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
» சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா : ஏப்ரல் 14ல் தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya