Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

Go down

பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு Empty பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா : லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

Post by oviya Sun Dec 07, 2014 9:27 am

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சக்குளத்துகாவு பகவதி அம்மன் கோயிலில் நேற்று பொங்கல் விழா நடந்தது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 12 லட்சம் பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். கேரளாவிலுள்ள பகவதி அம்மன் கோயிலில் சக்குளத்துகாவு பகவதி அம்மன் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். இக்கோயிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பொங்கல் விழாவில் கேரளா மட்டுமல்லாது தமிழகத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பகவதி அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவார்கள்.

இவ்வருட பொங்கல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து விளிச்சுசொல்லி பிரார்த்தனை நடந்தது. இதன் பின்னர் கோயில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி ஸ்ரீகோயில் தீபத்திலிருந்து அக்னியை எடுத்துவந்து கோயில் பண்டார அடுப்பில் பற்றவைத்தார். மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் கொடிக்குன்னில் சுரேஷ் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். விசுவ இந்து பரிஷத் தலைவர் கும்மனம் ராஜசேகரன் உரை நிகழ்த்தினார். இதன்பின் கோயிலைச் சுற்றி சுமார் 20 கி.மீ. சுற்றளவில் குவிந்திருந்த சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பொங்கலிட தொடங் கினர்.

காலை 10.30 மணியளவில் கோயில் அறக்கட்டளை நிர்வாகி மணிக்குட்டன் நம்பூதிரி தலைமையில் 100க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் பொங்கல் பானைகளின் மீது புனித நீர் தெளித்தனர். இதன்பின் தங்களது பிரார்த்தனையை சக்குளத்து தேவி நிறைவேற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர். தொடர்ந்து நேற்று மாலை 5 மணியளவில் கோயில் வளாகத்தில் கலாச்சார மாநாடு நடந்தது. பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் சக்குளத்துகாவில் குவிந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மண்டைக்காடு பகவதி அம்மனுக்கு 12–ந்தேதி ஆவணி அஸ்வதி பொங்கல் விழா
» இன்று ஆடி முதல் வெள்ளி : அம்மன் கோயில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
» ஆடிப்பெருக்கு : பெண்கள் சிறப்பு வழிபாடு
» கன்னியாகுமரியில் பகவதி அம்மனுக்கு ஓணப்பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேகம்–வழிபாடு
» கடலாடியில் சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் உற்சவ விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum