Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

Go down

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம் Empty திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

Post by oviya Sun Nov 30, 2014 2:02 pm

காரைக்கால், நவ.20–

காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் உள்ளது.

இங்கு சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

சனிபகவான் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வார். அடுத்தமாதம் 16–ந் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயறுகிறார்.

இந்த விழா திருநள்ளாறு கோவிலில் பிரமாண்டமாக நடக்கிறது. இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் எனவே இதற்கான ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் திருநள்ளாறு கோவில் நிர்வாகமும் செய்து வருகிறது.

பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் கோவிலுக்குள் சென்று பகவானை தரிசனம் செய்ய வசதியாக பொதுதரிசனம், ரூ.200, ரூ.500 கட்டண தரிசனங்கள் மற்றும் வி.ஐ.பி தரிசனம் என்று 4 வகையான வரிசைகள் அமைக்கப்படுகிறது. பொதுதரிசனம் செய்யும் பக்தர்கள் வடக்கு வீதியில் அமைக்கப்படும் வரிசையில் நுழைந்து வசந்த மண்டபத்தில் தங்க வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் சனீஸ்வரபகவான் உற்சவ மூர்த்தியையும், அடுத்து மூலவரையும் தரிசனம் செய்து விட்டு ராஜகோபுரத்திற்கு இடது பக்கம் உள்ள தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி விட்டு மீண்டும் வடக்கு பக்க வாசல் வழியாக செல்லலாம்.

ரூ.200 கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் சன்னதி தெருவில் அமைக்கப்படும் வரிசையில் நுழைந்து ராஜகோபுரம் வழியாக கோவிலுக்குள் நுழைந்து மூலவரையும், உற்சவ மூர்த்தியையும் தரிசனம் செய்து விட்டு கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள வாசல் வழியாக வெளியே செல்லலாம். அதுபோன்று ரூ.500 கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் தெற்கு வீதியில் அமைக்கப்படும் வரிசை வழியாக கோவில் தெற்கு கோபுரவாசல் வழியாக கோவிலுக்குள் வந்து விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, தியாகராஜர், அம்பாள் ஆகியோரை தரிசனம் செய்து விட்டு இறுதியாக பகவானையும்(மூலவர்), உற்சவ மூர்த்தியையும் தரிசனம் செய்து விட்டு மேற்கு வாசல் வழியாக வெளியே செல்லலாம்.

நளன் குளம் தூர்வாரப்பட்டு புதிதாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து பழைய தண்ணீரை வெளியேற்றி புதிதாக தண்ணீர் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கண்காணிக்க நளன் குளத்தை சுற்றி 2 இடங்களிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு குளோஸ்டு சர்க்யூட் வீடியோ மற்றும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். அதுபோன்று கோவிலின் உள்பகுதி, வெளிப்பகுதி, நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், நான்கு ராஜவீதிகள் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் மொத்தம் 92 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பிலும், புதுச்சேரி அரசு சாலை போக்கு வரத்துக்கழகம் சார்பிலும் பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு பஸ்களை இயக்க தேவஸ்தானம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதுபோன்று இந்த சனிப்பெயர்ச்சி விழாவிற்காக கர்நாடக மாநில போக்குவரத்துக்கழக பேருந்துகளையும் இயக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் வல்லவன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் கோவில்கள் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம், செயற் பொறியாளர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum