Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


கோவில்களும் கிரக ரகசியங்களும்

Go down

கோவில்களும் கிரக ரகசியங்களும் Empty கோவில்களும் கிரக ரகசியங்களும்

Post by oviya Sun Nov 30, 2014 2:03 pm

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அபூர்வ சக்தி படைத்த பல கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரக பலன்களை நமக்குத் தரவல்லவை. இந்த அரிய கோவில்களை நமது முன்னோர்கள், நமது நன்மைக்காகவே கட்டிச்சென்றுள்ளனர்.

இவை அனைத்தும் மகத்தான மந்திர சக்தி பெற்றவையாகும். உலகில் எந்த ஒரு நாட்டுக்காரர்களுக்கும் இத்தகைய பாக்கியம் கிடைத்தது இல்லை. நமக்கு அந்த பாக்கியம் கிடைத்து இருப்பதால் பழமையான ஆலயங்களை நாம் பேணி, போற்றி பாதுகாக்க வேண்டும். இத்தகைய கிரக சக்தி கொடுக்கப்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றிலும் கருவறையில் மூலமூர்த்தி எழுந்தருளியிருக்கும் பீடத்திற்கு அடியில், ஒரு குறிப்பிட்ட மந்திர வீரிய சக்தி உள்ள யந்திரங்கள் பத்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

எல்லா கோவில்களிலும் மூலவருக்கு கீழ் யந்திரம் பதிக்கப்படுவதுண்டு. மூல, உற்சவ மூர்த்திகளின் குறிப்பிட்ட சக்திகளுக்கு உண்மையான காரணம் இந்த யந்திரங்களே. இவைதான் நமக்கு துணை புரிகின்றன. பொதுவாக நமக்கு உண்டாகும் பல கடுமையான தோஷங்களை விரட்ட பரிகாரங்கள் உள்ளன.

ஆனால் அந்த பரிகார பூஜைகளுக்கு நிறைய செலவாகும். ஏழைகள், நடுத்தர மக்களால அதிகம் செலவு செய்து அந்த பரிகாரங்களை செய்யவே முடியாது. ஆதலால், பொதுநலன் கருதி அனைவருக்குமே எளிதில் அதே பரிகாரம் கிடைப்பதற்காக நமது முன்னோர்கள் நமக்காகவே ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய கோவில்களை நிர்மாணித்து அளித்துள்ளனர்.

சில யந்திரங்கள் கடன் தொல் லைகளைப் போக்கும். சில யந்திரங்கள் குறிப்பிட்ட வியாதி களுக்கு நிவாரணம் அளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, குழந்தைப் பாக்கியம் இல்லாமை, செய்வினைக் கோளாறுகள், அகால மரணங்கள், பித்ரு தோஷங்கள், படிப்பில் தடைகள், நிரந்தர உத்தியோகம் கிடைப்பதில் பிரச்சினைகள், மேலதிகாரிகளினால் அமைதியின்மை.

திருமணத் தடை கள், தாம்பத்ய சுகக் குறைவு, தொழில் நஷ்டம், மனோ ரீதியான பிரச்சினைகள், உடல், மனவளர்ச்சி இல்லாமை, காரணமற்ற பயம், பெண்களுக்கு வெளியில் கூற முடியாமலும், தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகும் நிலை போன்ற ஒவ்வொரு துன்பத்திற்கும் யந்திர சக்தி பெற்ற கோவில்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு, முக்காலமும் உணர்ந்த பெரியோர்கள் நமக்கு அளித்துச் சென்ற ஈடு, இணையற்ற செல்வங்களாக இவை உள்ளன.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum