கோவில்களும் கிரக அமைப்பும்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
கோவில்களும் கிரக அமைப்பும்
தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அபூர்வ சக்தி படைத்த பல கோவில்கள் உள்ளன. இந்த அரிய கோவில்களை நமது முன்னோர்கள், நமது நன்மைக்காகவே கட்டிச்சென்றுள்ளனர். இவை அனைத்தும் மகத்தான மந்திர சக்தி பெற்றவையாகும்.
உலகில் எந்த ஒரு நாட்டுக்காரர்களுக்கும் இத்தகைய பாக்கியம் கிடைத்தது இல்லை. நமக்கு அந்த பாக்கியம் கிடைத்து இருப்பதால் பழமையான ஆலயங்களை நாம் பேணி, போற்றி பாதுகாக்க வேண்டும். அது மட்டுமன்றி கோவில்களுக்கு மந்திரசக்தி ஊட்டுவதற்கும், அதன்பின்பு அந்த மந்திரசக்தியை நீடித்துப் பாதுகாப்பதற்கும் உள்ள விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
கருவறையில் மூலமூர்த்தி எழுந்தருளியிருக்கும் பீடத்திற்கு அடியில், ஒரு குறிப்பிட்ட மந்திர வீரிய சக்தி உள்ள யந்திரங்கள் பத்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எல்லா கோவில்களிலும் மூலவருக்கு கீழ் யந்திரம் பதிக்கப்படுவதுண்டு. மூல, உற்சவ மூர்த்திகளின் குறிப்பிட்ட சக்திகளுக்கு உண்மையான காரணம் இந்த யந்திரங்களே.
நமக்கு உண்டாகும் பல கடுமையான தோஷங்களை விரட்ட பரிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த பரிகார பூஜைகளுக்கு நிறைய செலவாகும். ஏழைகள், நடுத்தர மக்களால அதிகம் செலவு செய்து அந்த பரிகாரங்களை செய்யவே முடியாது. ஆதலால், பொதுநலன் கருதி அனைவருக்குமே எளிதில் அதே பரிகாரம் கிடைப்பதற்காக நமது முன்னோர்கள் நமக்காகவே ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய கோவில்களை நிர்மாணித்து அளித்துள்ளனர்.
சில யந்திரங்கள் கடன் தொல்லைகளைப் போக்கும். சில யந்திரங்கள் குறிப்பிட்ட வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, குழந்தைப் பாக்கியம் இல்லாமை, செய்வினைக் கோளாறுகள், அகால மரணங்கள், பித்ரு தோஷங்கள், படிப்பில் தடைகள், நிரந்தர உத்தியோகம் கிடைப்பதில் பிரச்சினைகள், மேலதிகாரிகளினால் அமைதியின்மை.
திருமணத்தடைகள், தாம்பத்ய சுகக் குறைவு, தொழில் நஷ்டம், மனோரீதியான பிரச்சினைகள், உடல், மனவளர்ச்சி இல்லாமை, காரணமற்ற பயம், பெண்களுக்கு வெளியில் கூற முடியாமலும், தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகும் நிலை போன்ற ஒவ்வொரு துன்பத்திற்கும் யந்திர சக்தி பெற்ற கோவில்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு, முக்காலமும் உணர்ந்த பெரியோர்கள் நமக்கு அளித்துச் சென்ற ஈடு, இணையற்ற செல்வங்களாக இவை உள்ளன.
உலகில் எந்த ஒரு நாட்டுக்காரர்களுக்கும் இத்தகைய பாக்கியம் கிடைத்தது இல்லை. நமக்கு அந்த பாக்கியம் கிடைத்து இருப்பதால் பழமையான ஆலயங்களை நாம் பேணி, போற்றி பாதுகாக்க வேண்டும். அது மட்டுமன்றி கோவில்களுக்கு மந்திரசக்தி ஊட்டுவதற்கும், அதன்பின்பு அந்த மந்திரசக்தியை நீடித்துப் பாதுகாப்பதற்கும் உள்ள விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்.
கருவறையில் மூலமூர்த்தி எழுந்தருளியிருக்கும் பீடத்திற்கு அடியில், ஒரு குறிப்பிட்ட மந்திர வீரிய சக்தி உள்ள யந்திரங்கள் பத்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. எல்லா கோவில்களிலும் மூலவருக்கு கீழ் யந்திரம் பதிக்கப்படுவதுண்டு. மூல, உற்சவ மூர்த்திகளின் குறிப்பிட்ட சக்திகளுக்கு உண்மையான காரணம் இந்த யந்திரங்களே.
நமக்கு உண்டாகும் பல கடுமையான தோஷங்களை விரட்ட பரிகாரங்கள் உள்ளன. ஆனால் அந்த பரிகார பூஜைகளுக்கு நிறைய செலவாகும். ஏழைகள், நடுத்தர மக்களால அதிகம் செலவு செய்து அந்த பரிகாரங்களை செய்யவே முடியாது. ஆதலால், பொதுநலன் கருதி அனைவருக்குமே எளிதில் அதே பரிகாரம் கிடைப்பதற்காக நமது முன்னோர்கள் நமக்காகவே ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய கோவில்களை நிர்மாணித்து அளித்துள்ளனர்.
சில யந்திரங்கள் கடன் தொல்லைகளைப் போக்கும். சில யந்திரங்கள் குறிப்பிட்ட வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு, குழந்தைப் பாக்கியம் இல்லாமை, செய்வினைக் கோளாறுகள், அகால மரணங்கள், பித்ரு தோஷங்கள், படிப்பில் தடைகள், நிரந்தர உத்தியோகம் கிடைப்பதில் பிரச்சினைகள், மேலதிகாரிகளினால் அமைதியின்மை.
திருமணத்தடைகள், தாம்பத்ய சுகக் குறைவு, தொழில் நஷ்டம், மனோரீதியான பிரச்சினைகள், உடல், மனவளர்ச்சி இல்லாமை, காரணமற்ற பயம், பெண்களுக்கு வெளியில் கூற முடியாமலும், தங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகும் நிலை போன்ற ஒவ்வொரு துன்பத்திற்கும் யந்திர சக்தி பெற்ற கோவில்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு, முக்காலமும் உணர்ந்த பெரியோர்கள் நமக்கு அளித்துச் சென்ற ஈடு, இணையற்ற செல்வங்களாக இவை உள்ளன.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya