Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம் : கோலாகல தொடக்கம்

Go down

ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம் : கோலாகல தொடக்கம் Empty ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம் : கோலாகல தொடக்கம்

Post by oviya Sun Dec 07, 2014 3:15 pm

திருமலை ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வருடாந்திர வசந்த உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நேற்று காலை கோயிலில் இருந்து நான்கு மாடவீதிகள் வழியாக மேற்கு மாட வீதியில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பிற்பகல் 2 மணிக்கு ஜீயர்கள் முன்னிலையில் பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு மூலிகை திரவியங்களை கொண்டு பண்டிதர்கள் வேதம் படிக்க உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இன்று காலை 8 மணி முதல் 9 வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர், வசந்த மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை சந்திர கிரகணத்தையொட்டி, காலை 6 மணிக்கு கோயிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ருக்குமணி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளின் வழியாக வசந்த மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு காலை 8.30 மணிமுதல் 10.30 மணி வரை சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெறுகிறது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum