சபரிமலை சன்னிதானத்தை தூய்மையாக வைக்க புதிய திட்டம் அறிமுகம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சபரிமலை சன்னிதானத்தை தூய்மையாக வைக்க புதிய திட்டம் அறிமுகம்
திருவனந்தபுரம், நவ.19–
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16–ந் தேதி திறக்கப்பட்டு உள்ளதால் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
நேற்று சபரிமலையில் தமிழக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் வழக்கத்தை விட அதிகமாக திரள்வதால் அதிகாலை 4 மணிக்கு திறக்க வேண்டிய கோவில் நடை நேற்று ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கே திறக்கப்பட்டது.
பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக ஒரு மணி நேரம் தாமதமாக பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டது. மேலும் மாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கே நடை திறக்கப்பட்டது. இரவும் 11 மணிக்கு பதில் 11.40 மணிக்குதான் கோவில் நடை அடைக்கப்பட்டது.
நடை அடைக்கப்பட்ட பிறகும் அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் தொடர்ந்து காத்து நின்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலையில் குப்பைகள் சேர்ந்து சுகாதார கேடுகள் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து ‘புண்ணியம் பூங்காவனம்’ என்ற திட்டத்தை தேவசம் போர்டும், கேரள போலீஸ் துறையும் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று சபரிமலையில் நடந்தது. கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி.பத்மகுமார் இதை தொடங்கி வைத்தார். தேவசம் போர்டு ஊழியர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் சபரிமலை சன்னிதானம் உள்பட சுற்றுப்பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் இந்த புதிய தூய்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஏ.டி.ஜி.பி.பத்மகுமார் தெரிவித்தார். சபரிமலையை தூய்மையாக பராமரிக்க உதவவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீசன் காலம் முடியும் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை கடந்த 16–ந் தேதி திறக்கப்பட்டு உள்ளதால் முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள்.
நேற்று சபரிமலையில் தமிழக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் வழக்கத்தை விட அதிகமாக திரள்வதால் அதிகாலை 4 மணிக்கு திறக்க வேண்டிய கோவில் நடை நேற்று ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கே திறக்கப்பட்டது.
பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக ஒரு மணி நேரம் தாமதமாக பகல் 2 மணிக்கு அடைக்கப்பட்டது. மேலும் மாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கே நடை திறக்கப்பட்டது. இரவும் 11 மணிக்கு பதில் 11.40 மணிக்குதான் கோவில் நடை அடைக்கப்பட்டது.
நடை அடைக்கப்பட்ட பிறகும் அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் தொடர்ந்து காத்து நின்றனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் சபரிமலையில் குப்பைகள் சேர்ந்து சுகாதார கேடுகள் ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து ‘புண்ணியம் பூங்காவனம்’ என்ற திட்டத்தை தேவசம் போர்டும், கேரள போலீஸ் துறையும் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று சபரிமலையில் நடந்தது. கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி.பத்மகுமார் இதை தொடங்கி வைத்தார். தேவசம் போர்டு ஊழியர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன ஊழியர்கள் சபரிமலை சன்னிதானம் உள்பட சுற்றுப்பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் இந்த புதிய தூய்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஏ.டி.ஜி.பி.பத்மகுமார் தெரிவித்தார். சபரிமலையை தூய்மையாக பராமரிக்க உதவவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீசன் காலம் முடியும் வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» மதுரை மீனாட்சியம்மன் கோயில் புதிய தங்க கொடிமரத்திற்கு மகா கும்பாபிஷேகம்
» திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்
» புதிய தொழில் தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நேரம்
» அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திருத்தம்: சட்டவிரோத அகதிகளுக்கு நன்மைக்கிடைக்காது- பிரதமர்
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
» திசை பார்த்து வைக்க வேண்டிய தெய்வப்படம்
» புதிய தொழில் தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உகந்த நேரம்
» அவுஸ்திரேலியாவின் புதிய அகதிகள் சட்டத்திருத்தம்: சட்டவிரோத அகதிகளுக்கு நன்மைக்கிடைக்காது- பிரதமர்
» மதுரை மீனாட்சி கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya