Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்

Go down

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம் Empty மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசம்

Post by oviya Sun Dec 07, 2014 3:17 pm

மதுரை: மாணிக்க மூக்குத்தி மதுரை மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரருக்கும் இன்று நடந்த திருக்கல்யாணத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 14ல் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை 4 மணிக்கு மீனாட்சி அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்தில் மண்டக படிகளில் எழுந்தருளி, சித்திரை வீதிகளை சுற்றி வந்தனர். பலவித மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கல்யாண மேடையில் காலை 7.56 மணிக்கு சுந்தரேஸ்வரர் - பிரியாவிடை, மீனாட்சி, முருகன், தெய்வானை மற்றும் பவளக் கனிவாய் பெருமாள் எழுந்தருளினர். குலசேகர பட்டர் வழி சிவாச்சாரியார் பிரகாஷ் சுந்தரேஸ்வரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழி சிவாச்சாரியார் சுவாமிநாதன் மீனாட்சியாகவும் வேடம் பூண்டிருந்தனர். மீனாட்சி அம்மன் சார்பாக உள்ள சிவாச்சாரியார் சுவாமிக்கு பாதபூஜை செய்தார். காப்பு கட்டிய சங்கர் பட்டர் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் செய்தார். 

பின்னர், பாலிகா பூஜை, ஹோமம், மாங்கல்யா பூஜை நடத்தப்பட்டு சுவாமி, பிரியாவிடை, அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது. சுவாமியும், அம்பாளும் 3 முறை மாலை மாற்றி கொண்டனர். பின் மீனாட்சிக்கு பச்சை பட்டும் பிரியாவிடைக்கு சிவப்பு பட்டும், சுவாமிக்கு பட்டாடையும் அணிவிக்கப்பட்டது. கெட்டி மேளம், செண்டை, நாதஸ்வரம், மேள, தாளங்கள் முழக்க, சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் சொல்ல முதலில் மீனாட்சி அம்மனுக்கும், பின்னர் பிரியாவிடைக்கும் காலை 8.44 மணிக்கு வைரத்தாலி அணிவிக்கப்பட்டது. பின்னர், பழைய கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர். திருக்கல்யாண உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை காலை 6 மணியளவில் அம்மன் சின்ன தேரிலும், சுவாமி மற்றும் பிரியாவிடை பெரிய தேரிலும் எழுந்தருளுகின்றனர். மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. தனித்தனி வாகனங்கள், தேர்களில் வீதி உலா வந்த சுவாமி-பிரியாவிடை, அம்மன் நாளை மாலை நடக்கும் சப்தாவர்ண சப்பரத்தில் மட்டும் ஒரே தேரில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம் : இன்று தேரோட்டம்
» சம்போ ஹரஹர மகாதேவா கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் : மாசி வீதிகளில் மக்கள் வெள்ளம்
» சீர்காழி அருகே முருகன் திருக்கல்யாணத்தை காணவந்த மயில்: பக்தர்கள் பரவசம்
» தி.மலையில் இன்று அதிகாலை பரணி தீபம் : பக்தர்கள் பரவசம்
» திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா : இரவு திருக்கல்யாணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum