Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படும் குமரி ஏழுமலையான் கோயிலுக்கு பூமி பூஜை : 2 ஆண்டுகளில் தரிசிக்கலாம்

Go down

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படும் குமரி ஏழுமலையான் கோயிலுக்கு பூமி பூஜை : 2 ஆண்டுகளில் தரிசிக்கலாம் Empty திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படும் குமரி ஏழுமலையான் கோயிலுக்கு பூமி பூஜை : 2 ஆண்டுகளில் தரிசிக்கலாம்

Post by oviya Tue Dec 09, 2014 1:48 pm

கன்னியாகுமரி, : கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படும் வெங்கடாஜலபதி கோயிலுக்கு இன்று பூமி பூஜை போடப்பட்டது. 2 ஆண்டுகளில் கோயில் கட்டி முடிக்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். டெல்லி உள்பட நாட்டின் பல முக்கிய நகரங்களிலும் திருப்பதி போலவே ஏழுமலையான் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்து வருகிறது. கன்னியாகுமரி விவேகானந்தபுரம் விவேகானந்தா கேந்திரத்தில் 5.5 ஏக்கரில் ரூ.22.5 கோடியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோயில் கட்டப்படுகிறது. இதற்கான நிலத்தை விவேகானந்த கேந்திரம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் சன்னதிகளுடன் கோசாலை, வேத பாடசாலை, புஷ்கரணி, தெப்பக்குளம், முடி காணிக்கை செலுத்தும் வசதி, திருமண மண்டபம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன. திருப்பதி போலவே தெப்ப திருவிழா உள்பட அனைத்து விழாக்களும் நடத்தப்படும். கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. கோமாதா பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை நடத்தப்பட்டது. திருப்பதி தேவஸ்தான ஆச்சாரியார்கள் பூஜை செய்தனர். இந்த பூஜைக்காக திருச்செந்தூர் முருகன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் நவதிருப்பதி கோயில்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டன.

திருப்பதி தேவஸ்தான சேர்மன் ஸ்ரீகணுமுரு பாபிராஜி எம்.பி., தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர். குமரியில் வெங்கடாஜலபதி கோயில் அமையும் இடம் ‘திருப்பதிபுரம்’ என அழைக்கப்பட உள்ளது. இக்கோயில் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஞாயிறன்று அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை 80 ஆயிரத்து 499 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்று ஒரே நாள் உண்டியல் காணிக்கை ரூ.2.96 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை சோதனையிட மேலும் 2 ஸ்கேனிங் இயந்திரம்: தேவஸ்தானம் அறிவிப்பு
» திருப்பதி ஏழுமலையான் அருளைப் பெறுவதற்கான மந்திரம்
» சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» சபரிமலை சீசன்: குமரி பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum