திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை சோதனையிட மேலும் 2 ஸ்கேனிங் இயந்திரம்: தேவஸ்தானம் அறிவிப்பு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களை சோதனையிட மேலும் 2 ஸ்கேனிங் இயந்திரம்: தேவஸ்தானம் அறிவிப்பு
திருமலை, : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்கள் என்பதால், நேற்று முன்தினமும், நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களுக்கான வைகுண்டம் காம்ப்ளக்ஸ் 14 அறைகளும் நேற்று நிரம்பி வழிந்தது. இதனால், பக்தர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் வெளியே காத்திருந்தனர். அதே போல், சர்வ தரிசனத்தில் 31 அறைகளும் நிரம்பியதால், பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வெளியே காத்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மதியம் 2 மணிக்கு நிறுத்தப்பட்டது.
சர்வதரிசனத்தில் பக்தர்கள் காத்திருக்கும் அறைகளை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ, ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வைகுண்டம் அறைகளில் காலியாக இருந்தாலும், பக்தர்களை சோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கிறோம். தற்போது 2 ஸ்கேனிங் இயந்திரம் மட்டும் உள்ளது. இதனால், பக்தர்களை விரைவாக சோதனை செய்து அனுப்ப முடியவில்லை. எனவே, இன்னும் ஒரு வாரத்தில் கூடுதலாக இரண்டு ஸ்கேனிங் இயந்திரங்களை பொருத்தி பக்தர்கள் 4 வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிபுணர்கள் குழு அமைப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு உலக புகழ் பெற்றதாகும். தினமும் 2 முதல் 3 லட்சம் லட்டுகள் மற்றும் இதர அன்னபிரசாதங்களை தேவஸ்தானம் தயார் செய்கிறது. இவற்றை தயாரிக்க ஒரு நாளைக்கு 9 டன் முதல் 10 டன் நெய் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு 3,300 டன் நெய் வாங்கப்படுகிறது. நெய் தரம் குறைவாக இருப்பதால், லட்டு பிரசாதத்தின் சுவை குறைவாக இருப்பதாக தேவஸ்தானம் கருதியது. இந்த நெய்யை இருப்பில் வைக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 6 பெரிய டேங்கர்கள் வாங்க முடிவு செய்தது. மேலும், நெய் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை தேவஸ்தானம் அமைத்தது. குழுவில் தேவஸ்தான கோசாலை இயக்குனர் ஹரிபிரசாத், டெல்லி ஐ.சி.ஏ.ஆர். உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியம், தேசிய பால் ஆராய்ச்சி இயக்குனர் சுரேந்தர்நாத், ஐதராபாத் உணவு தரக்கட்டுபாட்டு அதிகாரி பாஸ்கர் ரெட்டி, டெல்லியை சேர்ந்த ஆர்.கே.குப்தா ஆகியோர் உள்ளனர்.
சர்வதரிசனத்தில் பக்தர்கள் காத்திருக்கும் அறைகளை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ, ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வைகுண்டம் அறைகளில் காலியாக இருந்தாலும், பக்தர்களை சோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கிறோம். தற்போது 2 ஸ்கேனிங் இயந்திரம் மட்டும் உள்ளது. இதனால், பக்தர்களை விரைவாக சோதனை செய்து அனுப்ப முடியவில்லை. எனவே, இன்னும் ஒரு வாரத்தில் கூடுதலாக இரண்டு ஸ்கேனிங் இயந்திரங்களை பொருத்தி பக்தர்கள் 4 வரிசையில் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிபுணர்கள் குழு அமைப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு உலக புகழ் பெற்றதாகும். தினமும் 2 முதல் 3 லட்சம் லட்டுகள் மற்றும் இதர அன்னபிரசாதங்களை தேவஸ்தானம் தயார் செய்கிறது. இவற்றை தயாரிக்க ஒரு நாளைக்கு 9 டன் முதல் 10 டன் நெய் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு 3,300 டன் நெய் வாங்கப்படுகிறது. நெய் தரம் குறைவாக இருப்பதால், லட்டு பிரசாதத்தின் சுவை குறைவாக இருப்பதாக தேவஸ்தானம் கருதியது. இந்த நெய்யை இருப்பில் வைக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 6 பெரிய டேங்கர்கள் வாங்க முடிவு செய்தது. மேலும், நெய் தரம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை தேவஸ்தானம் அமைத்தது. குழுவில் தேவஸ்தான கோசாலை இயக்குனர் ஹரிபிரசாத், டெல்லி ஐ.சி.ஏ.ஆர். உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியம், தேசிய பால் ஆராய்ச்சி இயக்குனர் சுரேந்தர்நாத், ஐதராபாத் உணவு தரக்கட்டுபாட்டு அதிகாரி பாஸ்கர் ரெட்டி, டெல்லியை சேர்ந்த ஆர்.கே.குப்தா ஆகியோர் உள்ளனர்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்படும் குமரி ஏழுமலையான் கோயிலுக்கு பூமி பூஜை : 2 ஆண்டுகளில் தரிசிக்கலாம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் அருளைப் பெறுவதற்கான மந்திரம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் அருளைப் பெறுவதற்கான மந்திரம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya