சுயம்புவாக தோன்றி அருள் பாலிக்கிறாள் தோஷம் நிவர்த்தி செய்யும் முண்டகக்கண்ணியம்மன்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
சுயம்புவாக தோன்றி அருள் பாலிக்கிறாள் தோஷம் நிவர்த்தி செய்யும் முண்டகக்கண்ணியம்மன்
மயிலாப்பூரில் அமைந்துள்ளது முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தில் அம்பாள் சுயம்புவாக தோன்றியதாக வரலாறு எடுத்துரைக்கிறது. சுயம்புவின் மேற்பகுதி தாமரை மொட்டு வடிவிலும், முகப்பு பகுதியின் நடுவே திரிசூலம் பதிக்கப்பட்டும் இருந்தது. தாமரையின் மற்றொரு பெயர் முண்டகம் என்பதால் பக்தர்கள் அம்பாளை முண்டகக்கண்ணியம்மன் என அழைக்கின்றனர். 3 நிலை கோபுரத்தை கடந்து கோயிலுக்குள் நுழைந்தவுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள் முண்டகக்கண்ணியம்மன். அம்மன் சன்னதிக்கு பின்புறத்தில் உள்ள புற்றில் இருந்து தினமும் நாகம் அம்மனை வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அம்பாள் ஓலைக்கூரைக்கு கீழே அருள் பாலிக்கிறாள்.
அம்மன் சன்னதிக்கு இடதுபுறம் ஞானஜோதி நர்த்தன விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இதனுள் வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி, தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், ராமலிங்கசுவாமி ஆகியோர் தனித்தனியாக காட்சி தருகின்றனர். சன்னதிக்கு பின்புறத்தில் விநாயகர், நாகதேவதை மற்றும் வீரஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. மூலவர் முண்டகக்கண்ணியம்மன் சன்னதிக்கு பின்புறம் நாகப்புற்றும், குரு ஆலமரமும் அமைந்துள்ளது. வடபுறத்தில் தனிக்கோயிலில் சிம்மாசனத்தில் உற்சவராக அம்மன் காட்சி தருகிறாள். இந்த சன்னதிக்கு அருகே பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, கவுமாரி, சாமுண்டி, இந்திராணி ஆகிய சப்தகன்னியர்கள் ஒருங்கே இருந்து அருள் பாலிக்கின்றனர்.
இதன் இருபுறமும் பரசுராமர், ஜமதக்கனி முனிவர் சிலைகள் உள்ளன. ஆண்டு தோறும் இக்கோயிலில் நவராத்திரி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமியன்று அம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகமும், தை மாதம் கடைசி வெள்ளியன்று 108 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. ஆடிப்பூரம், விஜயதசமி, தை மாதம் கடைசி வெள்ளி, சித்ரா பவுர்ணமி மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் சிம்ம வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா நடைபெறும். இங்கு எழுந்தருளியுள்ள அம்மனை வழிபட்டால் தீராத நோய் நிவர்த்தியாகும். பில்லி சூன்யம், நாகதோஷம், கிரக தோஷம் நீங்கும்.
திருமணத் தடை அகலும். கல்வி, செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நோயற்ற உடல் வேண்டி அங்கபிரதட்சணம், வேப்பிலை பாவாடை அணிந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம், சர்க்கரை பொங்கல், கண்மலர், கை, கால் உருவங்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். இக்கோயில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரைக்கும், மாலை 4 மணி முதல் இரவு 9 வரையும் திறந்திருக்கும். ஆடி மாத பிறப்பையொட்டி இம்மாதம் அனைத்து நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அம்மனுக்கு பூஜிக்கப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்படும்.
எப்படி போகணும்:
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 10 நிமிட நடை தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
பூச்சொரிதல் விழா
ஆண்டு தோறும் ஆடிப்பூரத்தையொட்டி முண்டகக்கண்ணியம்மனுக்கு பூச்சொரிதல் திருவிழா நடைபெறும். அதன்படி ஆகஸ்ட் 9ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் 1008 பூக்கூடைகளை பெண்கள் சுமந்து சென்று மாடவீதிகளில் வலம் வருவார்கள். பின் மலர்களால் அம்பாளுக்கு பூஜை செய்யப்படும்.
அம்மன் சன்னதிக்கு இடதுபுறம் ஞானஜோதி நர்த்தன விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. இதனுள் வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி, தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், ராமலிங்கசுவாமி ஆகியோர் தனித்தனியாக காட்சி தருகின்றனர். சன்னதிக்கு பின்புறத்தில் விநாயகர், நாகதேவதை மற்றும் வீரஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. மூலவர் முண்டகக்கண்ணியம்மன் சன்னதிக்கு பின்புறம் நாகப்புற்றும், குரு ஆலமரமும் அமைந்துள்ளது. வடபுறத்தில் தனிக்கோயிலில் சிம்மாசனத்தில் உற்சவராக அம்மன் காட்சி தருகிறாள். இந்த சன்னதிக்கு அருகே பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வாராகி, கவுமாரி, சாமுண்டி, இந்திராணி ஆகிய சப்தகன்னியர்கள் ஒருங்கே இருந்து அருள் பாலிக்கின்றனர்.
இதன் இருபுறமும் பரசுராமர், ஜமதக்கனி முனிவர் சிலைகள் உள்ளன. ஆண்டு தோறும் இக்கோயிலில் நவராத்திரி பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமியன்று அம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகமும், தை மாதம் கடைசி வெள்ளியன்று 108 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. ஆடிப்பூரம், விஜயதசமி, தை மாதம் கடைசி வெள்ளி, சித்ரா பவுர்ணமி மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் சிம்ம வாகனத்தில் உற்சவர் திருவீதி உலா நடைபெறும். இங்கு எழுந்தருளியுள்ள அம்மனை வழிபட்டால் தீராத நோய் நிவர்த்தியாகும். பில்லி சூன்யம், நாகதோஷம், கிரக தோஷம் நீங்கும்.
திருமணத் தடை அகலும். கல்வி, செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நோயற்ற உடல் வேண்டி அங்கபிரதட்சணம், வேப்பிலை பாவாடை அணிந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம், சர்க்கரை பொங்கல், கண்மலர், கை, கால் உருவங்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். இக்கோயில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரைக்கும், மாலை 4 மணி முதல் இரவு 9 வரையும் திறந்திருக்கும். ஆடி மாத பிறப்பையொட்டி இம்மாதம் அனைத்து நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அம்மனுக்கு பூஜிக்கப்பட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்படும்.
எப்படி போகணும்:
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 10 நிமிட நடை தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
பூச்சொரிதல் விழா
ஆண்டு தோறும் ஆடிப்பூரத்தையொட்டி முண்டகக்கண்ணியம்மனுக்கு பூச்சொரிதல் திருவிழா நடைபெறும். அதன்படி ஆகஸ்ட் 9ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் 1008 பூக்கூடைகளை பெண்கள் சுமந்து சென்று மாடவீதிகளில் வலம் வருவார்கள். பின் மலர்களால் அம்பாளுக்கு பூஜை செய்யப்படும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருமண தோஷம் நிவர்த்தி செய்யும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர்
» அம்மன் அருள் கிடைக்க செய்யும் ஆடி செவ்வாய் விரதம்
» மகாலட்சுமி அருள் புரிய வேண்டுமா?
» கல்யாணம், கெட்டிமேளம், காமாட்சி அருள்!
» விநாயகரிடம் அருள் பெறும் விரதம் வழிபாடு
» அம்மன் அருள் கிடைக்க செய்யும் ஆடி செவ்வாய் விரதம்
» மகாலட்சுமி அருள் புரிய வேண்டுமா?
» கல்யாணம், கெட்டிமேளம், காமாட்சி அருள்!
» விநாயகரிடம் அருள் பெறும் விரதம் வழிபாடு
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya