திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் 18–ந்தேதி தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவம் 18–ந்தேதி தொடங்குகிறது
நகரி, நவ. 12–
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 19–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி வரை 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி தினமும் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
பிரம்மோற்சவத்தை யொட்டி 18–ந்தேதி காலையில் லட்ச குங்கும அர்ச்சனை சேவை நடக்கிறது. இரவு அங்குரார்ப்பணம் நடக்கிறது. 19–ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இரவு சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
20–ந்தேதி காலையில் பெரிய சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும், 21–ந்தேதி காலை மூட்டு பந்தல் வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், 22–ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும், 23–ந்தேதி காலை பல்லக்கு வாகனத்திலும், இரவு கஜ வாகனத்திலும், 24–ந்தேதி காலை சர்வ பூபால வாகனத்திலும், இரவு கருட வாகனத்திலும், 25–ந்தேதி காலை சூர்ய பிரனவ வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும், பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். 26–ந்தேதி காலையில் ரத உற்சவம் நடக்கிறது. மாலையில் குதிரை வாகனத்தில் வலம் வருகிறார். 27–ந் தேதி காலையில் பல்லக்கு சேவை நடக்கிறது.
அன்று மதியம் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.
பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. பக்தர்களுக்கான அனைத்து வித வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று கோவில் கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் திருமஞ்சன சேவை நடந்தது.
பிரம்மோற்சவ விழாவின் போது 23–ந்தேதி மாலை 4 மணிக்கு வசந்த உற்சவம் நடக்கிறது. 24–ந்தேதி மாலை 4 மணிக்கு சொர்ண ரத உற்சவம் நடக்கிறது.
27–ந்தேதி பஞ்சமி தீர்த்தம் அன்று திருப்பதி கோவிலில் இருந்து தேவஸ்தான அதிகாரிகள் மஞ்சள், குங்குமம், ஆபரணம், பட்டு வஸ்திரம் ஆகியவற்றை தலையில் ஏந்தி பாத யாத்திரையாக நடந்து பத்மாவதி தாயார் கோவிலுக்கு வருவார்கள். அலிபிரி வந்தவுடன் அவை கஜராஜு என்ற யானையின் மீது வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பத்மாவதி தாயார் கோவிலில் ஒப்படைக்கப்படும்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா வருகிற 19–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி வரை 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி தினமும் காலையிலும் மாலையிலும் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
பிரம்மோற்சவத்தை யொட்டி 18–ந்தேதி காலையில் லட்ச குங்கும அர்ச்சனை சேவை நடக்கிறது. இரவு அங்குரார்ப்பணம் நடக்கிறது. 19–ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இரவு சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
20–ந்தேதி காலையில் பெரிய சேஷ வாகனத்திலும், இரவு அன்ன வாகனத்திலும், 21–ந்தேதி காலை மூட்டு பந்தல் வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், 22–ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு அனுமந்த வாகனத்திலும், 23–ந்தேதி காலை பல்லக்கு வாகனத்திலும், இரவு கஜ வாகனத்திலும், 24–ந்தேதி காலை சர்வ பூபால வாகனத்திலும், இரவு கருட வாகனத்திலும், 25–ந்தேதி காலை சூர்ய பிரனவ வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும், பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் வலம் வருகிறார். 26–ந்தேதி காலையில் ரத உற்சவம் நடக்கிறது. மாலையில் குதிரை வாகனத்தில் வலம் வருகிறார். 27–ந் தேதி காலையில் பல்லக்கு சேவை நடக்கிறது.
அன்று மதியம் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமி தீர்த்தம் நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவார்கள்.
பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. பக்தர்களுக்கான அனைத்து வித வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று கோவில் கொடி மரம் சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் திருமஞ்சன சேவை நடந்தது.
பிரம்மோற்சவ விழாவின் போது 23–ந்தேதி மாலை 4 மணிக்கு வசந்த உற்சவம் நடக்கிறது. 24–ந்தேதி மாலை 4 மணிக்கு சொர்ண ரத உற்சவம் நடக்கிறது.
27–ந்தேதி பஞ்சமி தீர்த்தம் அன்று திருப்பதி கோவிலில் இருந்து தேவஸ்தான அதிகாரிகள் மஞ்சள், குங்குமம், ஆபரணம், பட்டு வஸ்திரம் ஆகியவற்றை தலையில் ஏந்தி பாத யாத்திரையாக நடந்து பத்மாவதி தாயார் கோவிலுக்கு வருவார்கள். அலிபிரி வந்தவுடன் அவை கஜராஜு என்ற யானையின் மீது வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பத்மாவதி தாயார் கோவிலில் ஒப்படைக்கப்படும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
» திருச்சானூர் பிரம்மோற்சவம் : 5வது நாள் கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரமோற்சவம் நாளை தொடங்குகிறது
» திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
» திருச்சானூர் பிரம்மோற்சவம் : 5வது நாள் கஜ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி
» திருச்சானூர் கோவில் பிரமோற்சவம்: தங்க ரதத்தில் பத்மாவதி தாயார் பவனி
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya