Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


முருகன் கேட்டு வாங்கிய வைர பதக்கம்

Go down

முருகன் கேட்டு வாங்கிய வைர பதக்கம் Empty முருகன் கேட்டு வாங்கிய வைர பதக்கம்

Post by oviya Sun Nov 30, 2014 2:26 pm

ஒரு தடவை வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை ஜெகவீரபாண்டிய மன்னர் தமக்கும் தமது மனைவிக்கும் உரித்தாயிருந்த விலை உயர்ந்த அணிகளைச் செந்திலாண்டவனுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார். அப்போது மன்னருக்குத் தெரியாமல் அவர் மனைவி ஒரு விலை மதிப்பற்ற இரத்தினப் பதக்கத்தை மட்டும் தமக்காக என்று எடுத்து வைத்துக் கொண்டாள்.

அன்று இரவு செந்தில் வேலவர் மன்னர் கனவிலே தோன்றி, ``வள்ளி தேவி ஒரு நவரத்தினப் பதக்கத்திற்கு ஆசைப்படுகின்றாள். ஆண்டியாகிய நான் நவரத்தினப் பதக்கத்திற்கு எங்கே போவேன்? உன் துணைவி வைத்திருக்கும் நவரத்தினப் பதக்கத்தை முடியுமானால் வள்ளி நாயகிக்குச் சமர்ப்பணம் செய்!'' எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

தமக்குத் தெரியாமல் தவறு செய்த தமது மனைவியைக் கடிந்து கொண்ட ஜெகவீரபாண்டிய மன்னர் உடனடியாக நவரத்தினப் பதக்கத்தையும் வேலவன் திருமுன் கொண்டு சென்று சமர்ப்பித்து விட்டார்.

இந்த வரலாற்றுக் கதை முற்றிலும் உண்மை எனச் சான்று பகர்வது போன்று உக்கிரபாண்டிய மன்னன் சமர்ப்பித்த நவரத்தின அணிகளைத் தேவஸ்தான அலுவலகத்தில் இன்றும் காண முடிகின்றது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum