Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை 2668 அடி மலை உச்சியில் மகாதீபம்

Go down

பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை 2668 அடி மலை உச்சியில் மகாதீபம் Empty பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை 2668 அடி மலை உச்சியில் மகாதீபம்

Post by oviya Thu Dec 11, 2014 1:45 pm

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று மகா தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது. 2,668 அடி உயர மலை உச்சியில் ஜோதிப்பிழம்பாக அண்ணாமலையார் காட்சிதரும் மகா தீபம் ஏற்றப்பட்டது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தேரோட்டம் 14ம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது.

விழாவையொட்டி அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலை யார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்க கவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. அதன்பின்னர், அண்ணாமலையார் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர் பரணி தீபம் அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டது. பிறகு பக்தர்களின் தரிசனத்துக்காக சொர்ணபைரவர் சன்னதி முன்பு பரணிதீபம் வைக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரணி தீபத்தை தரிசித்தனர். மாலை 6 மணிக்கு கோயில் தங்க கொடிமரம் அருகே அகண்டதீபம் ஏற்றியதும், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பருவதராஜ குல மரபினர் மகா தீபத்தை ஏற்றினர்.

மகா தீபத்தை தரிசிக்க, திருவண்ணாமலை நகர் முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனால், கோயில், மாட வீதி, கிரிவலப்பாதை என அனைத்து பகுதிகளும் மக்கள் வெள்ளத்தால் மூழ்கியது. தீபத்திருவிழாவை முன்னிட்டு, கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானம், ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
Tiruvannamalai : tipattiruvila great festivity took place yesterday in Tiruvannamalai . Annamalaiyar foot high mountains appearing at 2.668 and Great jotippilamp mounted

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum