பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை 2668 அடி மலை உச்சியில் மகாதீபம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை 2668 அடி மலை உச்சியில் மகாதீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று மகா தீபத்திருவிழா கோலாகலமாக நடந்தது. 2,668 அடி உயர மலை உச்சியில் ஜோதிப்பிழம்பாக அண்ணாமலையார் காட்சிதரும் மகா தீபம் ஏற்றப்பட்டது. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தேரோட்டம் 14ம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது.
விழாவையொட்டி அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலை யார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்க கவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. அதன்பின்னர், அண்ணாமலையார் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் பரணி தீபம் அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டது. பிறகு பக்தர்களின் தரிசனத்துக்காக சொர்ணபைரவர் சன்னதி முன்பு பரணிதீபம் வைக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரணி தீபத்தை தரிசித்தனர். மாலை 6 மணிக்கு கோயில் தங்க கொடிமரம் அருகே அகண்டதீபம் ஏற்றியதும், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பருவதராஜ குல மரபினர் மகா தீபத்தை ஏற்றினர்.
மகா தீபத்தை தரிசிக்க, திருவண்ணாமலை நகர் முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனால், கோயில், மாட வீதி, கிரிவலப்பாதை என அனைத்து பகுதிகளும் மக்கள் வெள்ளத்தால் மூழ்கியது. தீபத்திருவிழாவை முன்னிட்டு, கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானம், ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
Tiruvannamalai : tipattiruvila great festivity took place yesterday in Tiruvannamalai . Annamalaiyar foot high mountains appearing at 2.668 and Great jotippilamp mounted
விழாவையொட்டி அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலை யார், உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்க கவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. அதன்பின்னர், அண்ணாமலையார் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் பரணி தீபம் அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டது. பிறகு பக்தர்களின் தரிசனத்துக்காக சொர்ணபைரவர் சன்னதி முன்பு பரணிதீபம் வைக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரணி தீபத்தை தரிசித்தனர். மாலை 6 மணிக்கு கோயில் தங்க கொடிமரம் அருகே அகண்டதீபம் ஏற்றியதும், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பருவதராஜ குல மரபினர் மகா தீபத்தை ஏற்றினர்.
மகா தீபத்தை தரிசிக்க, திருவண்ணாமலை நகர் முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனால், கோயில், மாட வீதி, கிரிவலப்பாதை என அனைத்து பகுதிகளும் மக்கள் வெள்ளத்தால் மூழ்கியது. தீபத்திருவிழாவை முன்னிட்டு, கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானம், ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
Tiruvannamalai : tipattiruvila great festivity took place yesterday in Tiruvannamalai . Annamalaiyar foot high mountains appearing at 2.668 and Great jotippilamp mounted
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» பக்தர்கள் வெள்ளத்தில் திருவண்ணாமலை 2668 அடி மலை உச்சியில் மகாதீபம்
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» 17-ம் தேதி மகாதீபம் : அண்ணாமலையாருக்கு அரோகரா...
» பிறவிப்பிணி அறுக்கும் மகாதீபம்
» திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
» திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் : வெளிநாட்டு பக்தர்கள் குவிந்தனர்
» 17-ம் தேதி மகாதீபம் : அண்ணாமலையாருக்கு அரோகரா...
» பிறவிப்பிணி அறுக்கும் மகாதீபம்
» திருவண்ணாமலை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya