Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


ரங்கா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

Go down

ரங்கா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு Empty ரங்கா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

Post by oviya Thu Dec 11, 2014 2:25 pm

பக்தர்கள் குவிந்தனர்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ‘ரங்கா, ரங்கா, கோவிந்தா, கோவிந்தா‘ கோஷம் விண்ணை எட்ட, இன்று பக்தர்கள் வெள்ளத்தில் நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்தார். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், 108 திவ்ய தேசங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு, வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

பகல் பத்து நிறைவு நாளான நேற்று நம்பெருமாள், மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார். இன்று முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. ராப்பத்து முதல் நாளான இன்று அதிகாலை 2.45 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிப்பாடல் பாடி, சித்தூர் ராணி சென்னம்மாவால் வழங்கப்பட்ட ரத்தின அங்கி சாத்தப்பட்டு, கிளி மாலை, பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் திருவாபரணங்களுடன் நம்பெருமாள் அதிகாலை 3.15 மணிக்கு விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம ஹதியில் புறப்பட்டார்.

ஜெய விஜய வாசல் வழியாக சந்தன மண்டபத்தை அடைந்தார். ராஜ மகேந்திர சுற்று நாழிகேட்டான் வாசல், குலசேகரப் பட்டணம் வழியாக தங்க கொடிமரத்தை அடைந்த நம்பெருமாள், துரை பிரகாரம் வழியாக விரஜா நதி மண்டபத்தை அடைந்தார். அங்கு ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் விண்ணப்பிக்கப்பட்டன. அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் வழியே, ‘ரங்கா, ரங்கா, கோவிந்தா, கோவிந்தா’ கோஷங்கள் விண்ணை எட்ட பக்தர்கள் வெள்ளத்துக்கு இடையே கடந்தார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஜீயர், அமைச்சர்கள் காமராஜ், ஆனந்தன், சுப்பிரமணியன் மற்றும் குமார் எம்.பி, அரசு தலைமைக்கொறடா மனோகரன், இந்து அறநிலையத்துறை செயலாளர் கண்ணன், கமிஷனர் தனபால், கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். காலை 4.45 மணிக்கு திருக்கெட்டகையில் நம்பெருமாள் பிரவேசித்தார். 6.30 மணிக்கு சாதரா மரியாதை நடந்தது. 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

காலை 7.30 மணி முதல் 8.15 மணிவரை அலங்காரமும் அமுதும் செய்ய திரையிடப்பட்டது. காலை 8.15 முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் சேவை நடக்கிறது. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பக்தர்கள் கோயிலில் அனுமதிக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 2 மணி வரை கோயிலில் அனுமதிக்கப்பட்டனர். கோயிலுக்கு செல்வதற்குரிய முறையான வழிகள் குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்காததால், பக்தர்கள் பெரும் அவதியடைந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum