Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பிரகதீஸ்வரர் கோவிலில் 100 மூட்டை பச்சரிசியை சமைத்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்

Go down

பிரகதீஸ்வரர் கோவிலில் 100 மூட்டை பச்சரிசியை சமைத்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் Empty பிரகதீஸ்வரர் கோவிலில் 100 மூட்டை பச்சரிசியை சமைத்து சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம்

Post by oviya Mon Dec 01, 2014 12:52 pm

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது கங்கைகொண்ட சோழபுரம். இங்கு ராஜேந்திர சோழன் காலத்தில் கட்டப் பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, உலக புராதன சின்னங்களில் ஒன்றான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.

ராஜேந்திர சோழனால் கலை நயத்துடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியந்து பார்த்து செல்கின்றனர். இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் சுற்றளவு 62 அடி, உயரம் 13½ அடி ஆகும். இந்த சிவலிங்கம் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்ற சிறப்பும் உண்டு.

இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 28 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகின்றனர். சிறப்பு அலங்காரம் இங்கு 29–வது ஆண்டாக நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை பச்சரியை 5 நீராவி அடுப்புகளில் சமைத்தனர். மாலை வரை அன்னாபிஷேக பணிகள் நடந்தன. இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர்.

பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பல காரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலையில் மகா தீபாராதனை நடந்தது.

லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுவது என்றும், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் நின்று பிரகதீஸ்வரரை தரிசனம் செய்தனர்.

பின்னர் இரவில் சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களின் சாதம் போக மீதமுள்ள சாதம் அருகில் உள்ள குளத்தில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum