Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Go down

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் Empty ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா:ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Post by oviya Thu Dec 11, 2014 3:07 pm

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பம் நேற்று நடந்தது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். இக்கோயிலின் மாசி தெப்பத் திருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கியது. அதனையொட்டி, நம்பெருமாள் தினம் ஒரு வாகனத்தில் எழுந்தருளி, வழி நடை உபயங்கள் கண்டருளி வீதி உலா வந்து பக்தர்களு க்கு காட்சி அளித்தார். விழாவின் 4ம் நாளான கடந்த 7ம் தேதி நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த மாசி கருட சேவையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, விழா வின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்று நடந்தது.

அதன்படி, விழாவின் 8ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 4.15 மணி க்கு புறப்பட்டு கோயில் வளாகத்தின் வெளியே மேலவாசல் பகுதியிலுள்ள தெப்பக்குளத்தின் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு தெப்பகுளத்தில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் 7.45 மணிக்கு எழுந்தருளினார். நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளிய பின்னர் மைய மண்டபத்தை 3 முறை வலம் வந்து இரவு 8.45 மணிக்கு மைய மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் மைய மண்டபத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு கரைக்கு வந்து சேர்ந்தார். பின்னர் ஆஸ்தான மண்டபத்தில் உபயதாரர்களுக்கு மரியாதை செய்விக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஆஸ் தான மண்டபத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானத்திற்கு சென்றடைந்தார். மாசி தெப்பத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர் கள் நேற்று தெப்பகுளத்தை சுற்றி நின்று நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.நிறைவு நாளான இன்று 12ம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 7.30 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்தில் மதியம் 1 மணிக்கு எழுந்தருளுகிறார். அதைத்தொடர்ந்து நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் ஒற்றை பிரபை வாகனத்தில் எழுந்தருளி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இந்நிகழ்ச்சி பந்தக்காட்சி என அழைக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல் யாணி, மேலாளர் விஜயன், அறங்காவலர்கள் ரங்காச் சாரி, டாக்டர் சீனிவாசன், கஸ்தூரி, சுழல்முறை அறங்காவலர் வெங்கடேஷ் உத்தமநம்பி மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை (4ம்தேதி) தெப்பத் திருவிழா தொடங்குகிறது
» காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா:ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தரிசனம்
» பழனி திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் வைகுண்ட ஏகாதசி விழா
» ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum