Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோவிலில் 29–ந் தேதி சூரசம்ஹாரம்

Go down

பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோவிலில் 29–ந் தேதி சூரசம்ஹாரம் Empty பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோவிலில் 29–ந் தேதி சூரசம்ஹாரம்

Post by oviya Mon Dec 01, 2014 2:15 pm

பொள்ளாச்சியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து மாலையில் சுப்பிரமணிய சாமி திருவீதிஉலாவும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்கராம சாமி அடிகளார் அருளுரையும் நடந்தது. 28–ந்தேதி வரை 4 கால அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது.

28–ந்தேதி மாலை 6 மணிக்கு சிவபெருமானிடமிருந்து சுப்பிரமணியசாமி வேல் வாங்கும் உற்சவம் நடக்கிறது. 29–ந்தேதி மாலை 3 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. இதற்கு பேரூர் இளைய பட்டம் மருதாசல அடிகளார் முன்னிலை வகிக்கிறார்.

சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து சாமி தேரில் புறப்பட்டு எஸ்.எஸ். கோவில் வீதி வழியாக சென்று சத்திரம் வீதியும், தெப்பக்குளம் வீதியும் சந்திக்கும் இடத்தில் முதல் சூரன் கஜமுகாசூரனை வதம் செய்கிறார்.

பிறகு தெப்பக்குளம் வீதியாக சென்று தெப்பக்குளம் வீதியும், வெங்கட்ரமணன் வீதியும் சந்திக்கும் இடத்தில் 2–வது சூரன் சிங்க முகாசூரன் வதம் செய்கிறார். பின்னர் வெங்கட்ரமணன் வீதி வழியாக சென்று ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் (தாலுகா போலீஸ் நிலையம் எதிரில்) 3–வது சூரன் பானுகோபனையும் உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலையில் 4–வது சூரன் சூரபத்மனையும் வதம் செய்கிறார். பின்னர் மீண்டும் கோவிலை வந்தடைகிறார். 30–ந்தேதி காலை 9 மணிக்கு மகா அபிஷேகமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 31–ந் தேதி மாலை 6மணிக்கு திருஊஞ்சல் உற்சவ பூர்த்தியுடன் விழா நிறைவடைகிறது.

விழாவையொட்டி பொள்ளாச்சி விநாயகர் கலை மன்றம் சார்பில் கோவில் வளாகத்தில் 27–ந்தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு கந்தபுராண சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. குடவாசல் புலவர் வீ.ராம மூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர் செய்து வருகின்றனர்.

கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதானத்தில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது. மூலவருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. இதே போல் வருகிற 29–ந் தேதி வரை கந்த சஷ்டி சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

29–ந் தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு ஹோமமும், அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப் பெருமான் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் 30–ந் தேதி காலை 10 மணிக்கு ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. பின்னர் முருகப் பெருமான், வள்ளி– தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடை பெறுகிறது. பின்னர் கல்யாண வைபவ விருந்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வால்பாறையில் கந்தசஷ்டி ஆரம்பம்: 29–ந் தேதி சூரசம்ஹாரம்
» திருப்பரங்குன்றம் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிகிறார்கள்
» குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
» சோலைமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
» குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று நள்ளிரவு சூரசம்ஹாரம்: பக்தர்கள் குவிந்தனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum