Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


ஒரே நாளில் 25 கோடி ரூபா இலங்கைக்குள் பரிமாற்றம்! அதிர்ச்சியில் அரசாங்கம்

Go down

ஒரே நாளில் 25 கோடி ரூபா இலங்கைக்குள் பரிமாற்றம்! அதிர்ச்சியில் அரசாங்கம் Empty ஒரே நாளில் 25 கோடி ரூபா இலங்கைக்குள் பரிமாற்றம்! அதிர்ச்சியில் அரசாங்கம்

Post by oviya Fri Dec 05, 2014 12:16 pm

சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான அமெரிக்க டொலர்கள் நான்கு தடவைகள் இலங்கைக்கு பரிமாறப்பட்டமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு நாளில் இவ்வளவு பெருந்தொகையான பணம் யாருக்கு பரிமாறப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன தெரிவித்தார்.

இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? யாருக்குச் சென்றுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் செனவிரட்ன,

பொதுவேட்பாளராக களமிறங்கியிருக்கும் மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளவர்களுக்கு மத்தியில் பரஸ்பர விரோதமான நிலைப்பாடே காணப்படுகிறது. இது ஒரு குழப்பமான கூட்டணி.

இவர்களுக்கு பொதுவானதொரு கொள்கை இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைக் கொண்டுள்ளனர். பொதுவேட்பாளர் ஒவ்வொரு கட்சியுடன் ஒவ்வொரு விதமான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுகிறார். புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கட்சிகளே பெரும்பாலும் கைச்சாத்திடும். ஆனால் இவர்களின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கட்சிகளைவிட தனிநபர்களே அதிகமாக உள்ளனர்.

தேர்தலில் வெற்றிபெற்றால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கப்போவதாக மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். குறுகிய காலத்துக்குள் அது சாத்தியப்படாது. அவ்வாறு செய்வதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைமாற்றி, அரசியலமைப்பை மாற்றுவதாயின் ஏன் பொதுவேட்பாளராக களமிறங்கி ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நீக்க வேண்டிய தேவை சர்வதேசத்துக்கு மட்டுமே உள்ளது. இதனால் உள்ளூரில் உள்ளவர்களைப் பயன்படுத்தி அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» கோடி நலம் அருளும் ஐயப்பனுக்கு கோடி அர்ச்சனை
» ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைக்கு அடிபணிந்தது அரசாங்கம்
» மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்... - மறுக்கிறார் மனோ கணேசன்
» ஜனாதிபதிக்கு ஆடம்பர வாகனம்! பெறுமதியோ 17,500,000 ரூபா
» தகுதியற்ற நியமனங்களை வழங்கி பலவீனமான தமிழ்சமுகத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum