Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


துர்க்கை அம்மன் துர்க்கை அம்மன்

Go down

துர்க்கை அம்மன்  துர்க்கை அம்மன் Empty துர்க்கை அம்மன் துர்க்கை அம்மன்

Post by oviya Fri Dec 05, 2014 12:48 pm

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மகிஷாசுரன் என்னும் கொடூரமான அரக்கன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் பராசக்தியை நோக்கி தவம் இருந்து அன்னையிடம் ஆற்றல்மிகு பல வரங்களைப் பெற்றான். மகிஷாசுரன் தன் பெற்ற வரத்தின் வலிமையினால் தேவர்களையும் முனிவர்களையும் கொடுமை செய்தான்.

இதனால் தேவர்களும் முனிவர்களும் நாரதரை சந்தித்து தம் குறைகளைக் கூறினர். உடனே நாரதர், பார்வதியை நோக்கி தவம் இருந்தால் இதற்கு நல்ல வழி கிடைக்கும் என்று யோசனை கூறினார். தேவர்களும் - முனிவர்களும் பார்வதியை நோக்கி தவம் புரிந்தனர்.

பார்வதி தேவியும் அவர்களுக்கு காட்சி அளித்தாள். அவர்களின் குறைகளைக் களைய கருணை உள்ளம் கொண்டாள். தகுதியற்ற ஒரு அரக்கனுக்கு தேவையற்ற வரங்களை வழங்கிவிட்டோம் என்று வருந்தினாள்.

ஒரு முறை வழங்கி விட்ட வரங்களைத் திருப்பிப் பெறுதல் மரபன்று. இருப்பினும் தர்மத்தின் பொருட்டு தேவர்களுக்கும் - முனிவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார்.

அதனால் - பக்தர்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு மாயக் கோட்டை உருவாக்கி, அதனுள் மகிஷாசுரன் நுழைய முடியாதபடி அரண் அமைத்து பாதுகாத்தார் பார்வதிதேவி. தேவர்களையும் - முனிவர்களையும் துன்புறுத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்த அசுரன் கோபம் கொண்டான்.

மீண்டும் மகிஷாசுரன் பார்வதிதேவியை நோக்கிக் தவம்இருந்தான். பார்வதி அசுரனின் முன் தோன்றினாள். தாயே! தாங்கள் கொடுத்த வரத்தை நினையாது மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்டான்.

பிறகு, தேவர்களையும் - முனிவர்களையும் அவர்கள் பாதுகாப்புடன் இருக்கும் கோட்டையையும் தூள் தூளாக்கி விடுகிறேன் என்று குளுரைத்து கோட்டையை நோக்கி வந்தான். மகிஷாசுரனைக் கண்டு மீண்டும் தேவர்களும் - முனிவர்களும் பார்வதிதேவியை நோக்கி ஓடி வந்தனர்.

உடனே பார்வதிதேவி, கவலைப்படாதீர்கள்! மகிஷாசுரன் அழியும் காலம் நெருங்கிவிட்டது. தங்களின் யாகசாலையில் உள்ள ஓம குண்டத்தில் லலிதை என்றும் காமேஸ்வரியாகத் தோன்றி உங்களது துயரங்களைத் துடைப்பேன் என்று உறுதியளித்தார்.

அதன்படி அன்னை பரமேஸ்வரி லலிதை என்னும் காமேஸ்வரியாக அவதாரம் எடுத்து ஈஸ்வரனைத் திருமணம் புரிந்து கொண்டாள். ஈசனிடம் அஸ்திரங்களைப் பெற்று மகிஷாசுரனை எதிர்த்து போருக்கு புறப்பட்டாள்.

மகிஷாசுரன் இதனை அறிந்து அன்னையை எதிர்க்க தனது தம்பிமார்களான விசக்கனையும், விஷக்கரனையும் ஏவினான். உடனே அன்னை பரமேஸ்வரி தன்னுடைய அம்சமாக துர்க்தையாகத் தோன்றினாள்.

அந்த இரு அசுரர்களையும் விழுங்கினாள். பின்னர் துர்க்கா தேவி - தன்னை எதிர்த்த மகிஷாசுரனிடம் சென்றாள். மகிஷாசுரன் எவ்வளவோ சாமர்த்தியமாக மாயா ஜாலத்துடன் போர் புரிந்தும் ஒன்றும் செய்ய முடியாவில்லை.

இதனால் அதிர்ச்சியில் உறைந்தான். ஆக்ரோஷத்துடன் எழுந்த துர்க்காதேவி மகிஷாசுரனின் தலையைத் துண்டித்து வதம் செய்தாள். இதனைக் கண்ட தேவர்களும் - முனிவர்களும் மகிஷாசுரமர்த்தினி என்று துர்க்கையை வாயார போற்றித் துதித்தனர்.

இதனைக் குறிப்பது தான் நவராத்திரி என்பதாகும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum