Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


சப்த மங்கைத் தலங்கள் : சக்கராப்பள்ளி

Go down

சப்த மங்கைத் தலங்கள் : சக்கராப்பள்ளி Empty சப்த மங்கைத் தலங்கள் : சக்கராப்பள்ளி

Post by oviya Sun Dec 07, 2014 8:54 am

ஆதிசக்தியானவள், முதலில் இன்று சக்கராப்பள்ளி என்றழைக்கப்படும் தலத்திற்குள் நுழைந்தாள். மோட்சத்திற்கு இட்டுச் செல்லும் சக்ரவாஹம் எனும் பறவை, இத்தல ஈசனை பூஜித்து தவமியற்றி தான் வணங்கும் ஈசனே தன்னை தன் முக்திப்பதம் சேர்த்துக் கொண்ட அற்புதத் தலமாகும். அதனாலேயே இத்தல இறைவன் சக்ரவாகேஸ்வரர் எனப் போற்றப்படுகிறார். ஆதிசக்தி இத்தலத்தில் ஈசனின் நேத்ர தரிசனம் பெற்றாள். நெற்றிக் கண் என்பது ஞானாக்னி சொரூபமாகும். மாயைக் கலப்பேயில்லாத பூரண ஞானத்தை உணர்ந்தாள். ஈசனே நீக்கமற நிறைந்திருக்கும் மாபெரும் பேருணர்வை தனக்குள்ளும் தானாக நின்றுணர்ந்தாள். அருவமாக அத்தலத்திலேயே தன்னையும் நிலை நிறுத்திக் கொண்டாள்.

இது, சப்த மாதர்களில் ஒருவளான பிராம்மி பூஜித்த தலமாகும். சப்த மாதர்களும் சண்ட, முண்ட, ரக்தபீஜ அரக்கர்களை சாமுண்டியான காளி வதைப்பதற்கு சகல தேவர்களும் காளிக்கு உறுதுணையாக நின்றனர். மகாகாளியான சண்டிகைக்கு வேறொருவர் தயவு தேவையில்லையெனினும் ஒவ்வொரு தேவர்களிடமிருந்தும் ஒவ்வொரு சக்தி வடிவினிலும் ஒவ்வொரு மாதராக சப்த மாதர்களும் வெளிவந்தனர். ஒவ்வொரு தேவனுக்குரிய வடிவம், வண்ணம், வாகனம், ஆயுதம், ஆபரணம் இவற்றினூடே சக்தியும் தோன்றினாள். அப்படித்தான் பிரம்மனிடமிருந்து அவரது சக்தியான பிராம்மணி வெளிப்பட்டாள்.

அவள், மோட்ச நிலையை குறிக்கும் ஹம்ஸ விமானத்தில் அமர்ந்து வந்தாள். அப்பேற்பட்ட பிராம்மணி கையில் அட்சமாலையுடனும் கமண்டலத்தோடும் அமர்ந்து இத்தல ஈசனை பூஜித்துச் சென்றாள். அவள் அரக்கர்களை அழிக்கத்தான் ஆயுதங்கள் பெற்றுச் சென்றதாகவும் கூறுவர். அநவித்யநாதசர்மா தம்பதி இவ்வாறு ஆதிசக்தியும் பிராம்மணியும் தவமியற்றிய தலத்தில் நின்றனர். சக்ரவாகேஸ்வரரை தரிசித்துவிட்டு சக்ர மங்கையான தேவநாயகியைப் பார்த்தபோது, பெண்ணின் ஏழு பருவங்களில் ஒன்றான பேதை (சிறுமி) வடிவினளாக அம்பாள் காட்சி தந்தாள். பெண்ணின் பருவப் பயணத்தின் முதல் அம்சமான பேதையாக சக்தி அங்கு நிலை கொண்டிருப்பதை உணர்ந்து வணங்கினார்.

இது, திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற, மிகப் பழமையான ஆலயம். கோயிலின் கருங்கற் சுவரில் சக்ரவாஹப் பறவை பூஜிப்பது போன்ற சிற்பம் நம்மை நெகிழ்த்துகிறது. ஈசன் சக்ரவாகேஸ்வரர் மூலவராக கருவறையில் பேரருள் புரிகிறார். தியானத்தில் மூழ்கிக் கிடக்கும் ரிஷியின் சாந்நித்தியத்தை அளித்து திகைக்க வைக்கும் சந்நதி அது. அம்பாளின் வலது திருவடி பக்தர்களை ரட்சிக்க புறப்படும் பரபரப்பு தோரணையாக சற்று முன்வைத்திருப்பது விசேஷமாகும். பிராகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தியின் மீது ஐந்து தலை நாகம் குடைபிடிக்கிறது. அதன்மேல் ஆலமரம். கரங்களில் நாகாபரணமும் அணிந்து தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பது வேறெங்கும் காண முடியாததாகும். தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவிலுள்ள அய்யம்பேட்டை எனும் ஊருக்கு அருகே இத்தலம் உள்ளது.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum