பிள்ளைப் பேறளிக்கும் பெருமாளுக்கு நடைவண்டி காணிக்கை!
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
பிள்ளைப் பேறளிக்கும் பெருமாளுக்கு நடைவண்டி காணிக்கை!
சோத்தமங்கலம்
சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஈடு இணையற்ற மாமன்னரான ராஜராஜசோழன் இறைவனிடம் பெரும் பக்தி பூண்டிருந்தார். இறைவனோடு தான் கலந்து போக வேண்டுமென்பதே அவரின் தாபமாக இருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் பல கோயில்களை சோழ தேசம் முழுவதும் கட்டினார். அதேபோல விண்ணகரங்கள் என்றழைக்கப்படும் விஷ்ணுவின் ஆலயங்களையும் வழிபட்டார். அவற்றில் சிலவற்றை கட்டவும் செய்தார். ஒருமுறை பாபநாசம் அருகேயுள்ள தற்போதைய சோத்தமங்கலம் என்னும் சிற்றூருக்குச் சென்றார். காலை நேரத்தில் சூர்யோதய தருணத்தில் அவ்வூரிலுள்ள தர்சபுஷ்கரணி குளத்தில் ராஜ ராஜசோழன் குளித்தபோது தண்ணீரில் கோயில் ஒன்றின் கோபுரம் நிழலாய் தெரிந்தது.
அதனை கண்டு வியப்புற்ற ராஜராஜசோழன் அங்கு எழுந்தரு ளியிருக்கும் பெருமாளை வழிபட்டார். தொடர்ந்து அவ்வூரில் இருந்தது வரை தினமும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டதோடு மட்டுமல்லாமல் அன்னதா னமும் செய்தார். நாளடையில் அன்னதானபுரம் என்றே இவ்வூர் வழங்கப்பட்டு, காலப்போக்கில் சோத்தமங்கலம் என்று மருவியது. ராஜராஜசோழன் இத்தலத்திலுள்ள ரங்கநாதப் பெருமாளை தொழுத பின்னரே அவருக்கு குழந்தை பிறந்ததாக கூறுகிறார்கள். இந்த கோயிலில் ராஜராஜசோழனுக்கு புத்திர பாக்கியம் கிட்டிய தால், இன்றும் பலர் பெருமாளை வழிபட்டு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுகிறார்கள். அந்த கொடைக்கு நன்றியறிதலாக நடைவண்டியை வாங்கி பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள். இதுதான் இத்தலத்தின் பெருஞ் சிறப்பாகும்.
ஸ்ரீதேவி- பூதேவியுடன் ரங்கநாதப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். எம்பெருமான் தன்னுடைய கழுத்தில் அரும்புமாலை சாற் றிக் கொண்டிருக்கிறார். கோயில், சுமார் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். ராஜராஜசோழனால் திருப்பணி செய்யப்பட்ட வைணவக் கோயில் என்கிற சிறப்பும் இதற்கு உண்டு. ஆரம்ப காலத்தில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இருந்திருக்கிறது. காலப்போக்கில் பலரது படையெடுப்புகளால் கோயில் இடிக்கப்பட்டு, சிதிலம டைந்தது. இதையடுத்து கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் அப்போதிருந்த ஊர் பெரியவர்கள் இக்கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் எனக் கருதி அதற்கான திருப்பணிகளை தொடங்க பாலாலயம் செய்தனர்.
அப்போது கோயில் கருவறையில் இருந்த மூலவர் ரங்கநாதப்பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி, அனுமன் மற்றும் ஆழ்வார்கள் சிலைகளை கோயில் அருகே ஒரு சிறிய இடத்தில் அமைத்து பூஜித்தனர். இன்றும் அப்படியே செய்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்திட வேண்டுமென கிராம மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோயிலில் ஒரு சில சந்நதிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. கும்பகோணத்திலிருந்து ஆவூர் வழியாக பாபநாசம் செல்லும் பாதையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. பேருந்து எண் 52 இவ்வழியாகச் செல்கிறது. 9443381128 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டால், வழிபாடு எளிதாக அமையும்; கோயில் பற்றிய மேலும் விவரங்கள் கிடைக்கும்.
சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஈடு இணையற்ற மாமன்னரான ராஜராஜசோழன் இறைவனிடம் பெரும் பக்தி பூண்டிருந்தார். இறைவனோடு தான் கலந்து போக வேண்டுமென்பதே அவரின் தாபமாக இருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான் பல கோயில்களை சோழ தேசம் முழுவதும் கட்டினார். அதேபோல விண்ணகரங்கள் என்றழைக்கப்படும் விஷ்ணுவின் ஆலயங்களையும் வழிபட்டார். அவற்றில் சிலவற்றை கட்டவும் செய்தார். ஒருமுறை பாபநாசம் அருகேயுள்ள தற்போதைய சோத்தமங்கலம் என்னும் சிற்றூருக்குச் சென்றார். காலை நேரத்தில் சூர்யோதய தருணத்தில் அவ்வூரிலுள்ள தர்சபுஷ்கரணி குளத்தில் ராஜ ராஜசோழன் குளித்தபோது தண்ணீரில் கோயில் ஒன்றின் கோபுரம் நிழலாய் தெரிந்தது.
அதனை கண்டு வியப்புற்ற ராஜராஜசோழன் அங்கு எழுந்தரு ளியிருக்கும் பெருமாளை வழிபட்டார். தொடர்ந்து அவ்வூரில் இருந்தது வரை தினமும் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டதோடு மட்டுமல்லாமல் அன்னதா னமும் செய்தார். நாளடையில் அன்னதானபுரம் என்றே இவ்வூர் வழங்கப்பட்டு, காலப்போக்கில் சோத்தமங்கலம் என்று மருவியது. ராஜராஜசோழன் இத்தலத்திலுள்ள ரங்கநாதப் பெருமாளை தொழுத பின்னரே அவருக்கு குழந்தை பிறந்ததாக கூறுகிறார்கள். இந்த கோயிலில் ராஜராஜசோழனுக்கு புத்திர பாக்கியம் கிட்டிய தால், இன்றும் பலர் பெருமாளை வழிபட்டு குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுகிறார்கள். அந்த கொடைக்கு நன்றியறிதலாக நடைவண்டியை வாங்கி பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்கள். இதுதான் இத்தலத்தின் பெருஞ் சிறப்பாகும்.
ஸ்ரீதேவி- பூதேவியுடன் ரங்கநாதப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். எம்பெருமான் தன்னுடைய கழுத்தில் அரும்புமாலை சாற் றிக் கொண்டிருக்கிறார். கோயில், சுமார் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். ராஜராஜசோழனால் திருப்பணி செய்யப்பட்ட வைணவக் கோயில் என்கிற சிறப்பும் இதற்கு உண்டு. ஆரம்ப காலத்தில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இருந்திருக்கிறது. காலப்போக்கில் பலரது படையெடுப்புகளால் கோயில் இடிக்கப்பட்டு, சிதிலம டைந்தது. இதையடுத்து கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் அப்போதிருந்த ஊர் பெரியவர்கள் இக்கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் எனக் கருதி அதற்கான திருப்பணிகளை தொடங்க பாலாலயம் செய்தனர்.
அப்போது கோயில் கருவறையில் இருந்த மூலவர் ரங்கநாதப்பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி, அனுமன் மற்றும் ஆழ்வார்கள் சிலைகளை கோயில் அருகே ஒரு சிறிய இடத்தில் அமைத்து பூஜித்தனர். இன்றும் அப்படியே செய்து வருகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்திட வேண்டுமென கிராம மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோயிலில் ஒரு சில சந்நதிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. கும்பகோணத்திலிருந்து ஆவூர் வழியாக பாபநாசம் செல்லும் பாதையில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. பேருந்து எண் 52 இவ்வழியாகச் செல்கிறது. 9443381128 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டால், வழிபாடு எளிதாக அமையும்; கோயில் பற்றிய மேலும் விவரங்கள் கிடைக்கும்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» நல்ல குழந்தைப் பேறளிக்கும் நட்டாத்தி அம்மன்
» பக்தர்களின் 3 மாத காணிக்கை : திருப்பதி உண்டியலில் ரூ.1.50 கோடி தங்கம்
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு 1 கோடியில் வைர கிரீடம் நவரத்தின மாலை
» பக்தர்களின் 3 மாத காணிக்கை : திருப்பதி உண்டியலில் ரூ.1.50 கோடி தங்கம்
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு 1 கோடியில் வைர கிரீடம் நவரத்தின மாலை
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya