திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா இன்று கோலாகல தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருத்தணியில் ஆடி கிருத்திகை விழா இன்று கோலாகல தொடக்கம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. தொடர்ந்து 3 நாட்கள் விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் விழா முன்னேற்பாடுகள் குறித்து செங்கை சரக டிஐஜி சத்தியமூர்த்தி, போலீஸ் அதிகாரிகளுடன் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் கோயில் பகுதிகளை நேற்று ஆய்வு செய்தார். மேலும் கலெக்டர் வீரராகவ ராவ், எஸ்.பி. ரூபேஷ்குமார் மீனா, கூடுதல் எஸ்.பி. செந்தில்குமார், ஆர்டிஓ கலைவாணி, டிஎஸ்பி கோபாலன், நகராட்சி தலைவர் சவுந்தரராஜன், கோயில் தக்கார் ஜெயசங்கர், நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், தாசில்தார் ஜான்சவுந்தரராஜன், தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மலைக்கோயிலில் உள்ள தேர் வீதி, சரவண பொய்கை குளம், நல்லான்குளம், பக்தர்கள் கூடும் முக்கிய பகுதிகளில் தற்காலிகமாக கேமராக்கள் அமைத்து கூட்ட நெரிசலை கண்காணிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பக்தர்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கவும், திருத்தணி சரவண பொய்கை குளம் அருகே கழிவுநீர் கால்வாய், படவேட்டம்மன் கோயில் அருகே பள்ளங்கள், கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தி மூடவேண்டும், நகராட்சி சுகாதார ஆய்வா ளர்கள் கடைகளில் சோதனையிட்டு பிளாஸ்டிக் பைகளை உடனே பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தினார்.
தற்காலிக பேருந்து நிலையங்கள், பக்தர்கள் கூடும் இடங்களில் விளக்கு, கழிப்பறை, மொபைல் கழிப்பிட வசதி ஏற்படுத்தவும், பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து துணிப்பை வழங்கி நகராட்சியில் பிளாஸ்டிக்கை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நல்லான்குளத்தில் குறிப்பிட்ட அளவே குளிக்கவும், தடுப்பு வேலிகள் அமைக்கவும், மலை படிக்கட்டுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபுறமும் இடையூறின்றி கடைகள் அமைக்கவும் உத்தரவிட்டார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
எஸ்பி ரூபேஷ்குமார் மீனா கூறும்போது, டிஐஜி சத்தியமூர்த்தி மேற்பார்வையில் எனது தலைமையில் ஒரு ஏ.டி.எஸ்.பி, 16 டிஎஸ்பிக்கள், 46 இன்ஸ்பெக்டர்கள், 140 எஸ்.ஐக்கள் உள்பட 1,580 போலீசாரும், என்.சி.சி, ஊர்க்காவல் படையின ரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 தீயணைப்பு வண்டிகள், 3 ரப்பர் படகு, 140 தீயணை ப்பு வீரர்கள், இதுதவிர பழவேற்காட்டை சேர்ந்த நீச்சல் வீரர்கள் நல்லான்குளம் மற்றும் சரவண பொய்கை குளத்தில் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
அப்போது, மலைக்கோயிலில் உள்ள தேர் வீதி, சரவண பொய்கை குளம், நல்லான்குளம், பக்தர்கள் கூடும் முக்கிய பகுதிகளில் தற்காலிகமாக கேமராக்கள் அமைத்து கூட்ட நெரிசலை கண்காணிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பக்தர்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்கவும், திருத்தணி சரவண பொய்கை குளம் அருகே கழிவுநீர் கால்வாய், படவேட்டம்மன் கோயில் அருகே பள்ளங்கள், கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்தி மூடவேண்டும், நகராட்சி சுகாதார ஆய்வா ளர்கள் கடைகளில் சோதனையிட்டு பிளாஸ்டிக் பைகளை உடனே பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தினார்.
தற்காலிக பேருந்து நிலையங்கள், பக்தர்கள் கூடும் இடங்களில் விளக்கு, கழிப்பறை, மொபைல் கழிப்பிட வசதி ஏற்படுத்தவும், பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து துணிப்பை வழங்கி நகராட்சியில் பிளாஸ்டிக்கை படிப்படியாக ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நல்லான்குளத்தில் குறிப்பிட்ட அளவே குளிக்கவும், தடுப்பு வேலிகள் அமைக்கவும், மலை படிக்கட்டுகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் இருபுறமும் இடையூறின்றி கடைகள் அமைக்கவும் உத்தரவிட்டார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
எஸ்பி ரூபேஷ்குமார் மீனா கூறும்போது, டிஐஜி சத்தியமூர்த்தி மேற்பார்வையில் எனது தலைமையில் ஒரு ஏ.டி.எஸ்.பி, 16 டிஎஸ்பிக்கள், 46 இன்ஸ்பெக்டர்கள், 140 எஸ்.ஐக்கள் உள்பட 1,580 போலீசாரும், என்.சி.சி, ஊர்க்காவல் படையின ரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 5 தீயணைப்பு வண்டிகள், 3 ரப்பர் படகு, 140 தீயணை ப்பு வீரர்கள், இதுதவிர பழவேற்காட்டை சேர்ந்த நீச்சல் வீரர்கள் நல்லான்குளம் மற்றும் சரவண பொய்கை குளத்தில் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» சங்கரன்கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடித்தபசு விழா கோலாகல தொடக்கம்
» ஆடி கிருத்திகை விழா இன்று தெப்ப உற்சவம் : காவடிகளுடன் பக்தர்கள் திரண்டனர்
» புத்தேரி ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம் : கோலாகல தொடக்கம்
» திருத்தணியில் இன்று (27.03.2014) ஆறுமுக சுவாமி மீது சூரியஒளி விழும் அதிசயம்
» ஆடி கிருத்திகை விழா இன்று தெப்ப உற்சவம் : காவடிகளுடன் பக்தர்கள் திரண்டனர்
» புத்தேரி ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
» ஏழுமலையான் கோயிலில் 3 நாள் வசந்த உற்சவம் : கோலாகல தொடக்கம்
» திருத்தணியில் இன்று (27.03.2014) ஆறுமுக சுவாமி மீது சூரியஒளி விழும் அதிசயம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya