Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்

Go down

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம் Empty பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்

Post by oviya Sun Nov 30, 2014 1:23 pm

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். அதிலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் உகந்ததாகும். இந்நாளில் பெருமாளுக்கு என்னவெல்லாம் செய்து படைக்க வேண்டும் மற்றும் எப்படி படைக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

இந்நாளில் பெருமாள் படத்துக்கு துளசி மாலை சாற்றி, சந்தனம், குங்குமம் அல்லது செந்தூரம் இட்டு நாமக்கட்டியை குழைத்து பொட்டு வைக்க வேண்டும்.

வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம் மற்றும் ஒரு கலவை சாதம் வைக்க வேண்டும். மேலும் ஒரு கிண்ணத்தில் சிறிது இளநீர் எடுத்து கொண்டு அதில் துளசி இலையை போட்டும், மற்றொரு கிண்ணத்தில் நாமக்கட்டியை குழைத்தும் வைக்க வேண்டும்.

பெருமாள் படத்திற்கு தூபம் மற்றும் தீபம் காட்டி நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்ட வேண்டும். பிறகு பெருமாளை வணங்கி விட்டு துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். அதற்கு பின்னர் தான் சாப்பிட வேண்டும்.

இது பொதுவாக புரட்டாசி சனிக்கிழமையில் செய்ய வேண்டியது ஆகும். அதிலும் கடைசி புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அந்நாளில் எல்லாவகை சித்திரானங்களையும் செய்து அத்துடன் சுண்டல்,  மிளகுவடை, முருங்கைக்கீரை தாளிப்பு, மாவிளக்கு இவைகள் அனைத்தும் முக்கிய நைவேத்தியங்களாகும்.

வடைகளை மாலையாக கோர்த்து பெருமாள் படத்திற்கு சாற்ற வேண்டும். மேலும் அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் செய்வது போல் படைக்க வேண்டும்.

கற்பூர தீபம் காட்டும் போது கோவிந்தா கோவிந்தா என்று ஆரவாரத்துடன் சப்தமிட்டு ஏழுமலையானை அழைக்க வேண்டும். இவ்வாறாக பெருமாளை வழிப்பட்டு அவரது அருளை பெறுங்கள்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமை விரதம்
» புரட்டாசி 4–வது சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
» புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
» இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை: தேவநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
» காரமடை அரங்கநாதர் கோவிலில் 20–ந் தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum