திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
திருப்பதி கோவிலில் பிரமோற்சவம் இன்று தொடக்கம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அடுத்த மாதம் 4–ந்தேதி வரை 9 நாட்கள் விழா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை 30–ந்தேதி இரவு நடக்கிறது.
விழாவையொட்டி நேற்று கோவிலில் அங்குரார்பணம் நடந்தது. மேலும் ஏழுமலையான் சேனாதிபதியான விஸ்வக்சேனர் வீதி உலா நடந்தது.
இன்று மாலை 5.36 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவியுடன் மலையப்ப சாமி மாட வீதிகளில் உலா வருகிறார்.
இன்றைய விழாவில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்குகிறார்.
இதற்காக அவர் ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 1 மணி அளவில் ரேணிகுண்டா வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் 1.50 மணிக்கு திருமலை வந்து பத்மாவதி விடுதியில் தங்குகிறார். அங்கு விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இரவு 7.30 மணி அளவில் கோவில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவில் முன்பு இருந்து அவர் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து கோவிலுக்கு செல்கிறார். அதனை ஏழுமலையானுக்கு வழங்கி தரிசனம் செய்கிறார்.
பின்னர் சேஷ வாகன அலங்காரத்தில் உற்சவரான மலையப்பசாமியை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்ததும் விமானம் மூலம் ஐதராபாத் திரும்புகிறார்.
சந்திரபாபு நாயுடு 11 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சுமந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடு வருகையை முன்னிட்டு திருமலையில் வரலாறு காணாத வகையில் 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மலை பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு பிரிவில் மட்டும் 1,500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர 4,500 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மலைபாதையில் 10 அடிக்கு ஒரு போலீஸ் என நிறுத்தப்பட உள்ளனர்.
இவர்கள் தவிர வெடிகுண்டு நிபுணர்கள், உளவு பிரிவு போலீசார், அதிரடி படையினர் ஆகியோரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
விழாவை முன்னிட்டு கோவிலில் அனைத்து கட்டண தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது என்றும் பக்தர்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி கிரிதர் கோபால் தெரிவித்தார்.
விழாவையொட்டி நேற்று கோவிலில் அங்குரார்பணம் நடந்தது. மேலும் ஏழுமலையான் சேனாதிபதியான விஸ்வக்சேனர் வீதி உலா நடந்தது.
இன்று மாலை 5.36 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீதேவியுடன் மலையப்ப சாமி மாட வீதிகளில் உலா வருகிறார்.
இன்றைய விழாவில் முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்குகிறார்.
இதற்காக அவர் ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு பிற்பகல் 1 மணி அளவில் ரேணிகுண்டா வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் 1.50 மணிக்கு திருமலை வந்து பத்மாவதி விடுதியில் தங்குகிறார். அங்கு விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இரவு 7.30 மணி அளவில் கோவில் எதிரே உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவில் முன்பு இருந்து அவர் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து கோவிலுக்கு செல்கிறார். அதனை ஏழுமலையானுக்கு வழங்கி தரிசனம் செய்கிறார்.
பின்னர் சேஷ வாகன அலங்காரத்தில் உற்சவரான மலையப்பசாமியை தரிசனம் செய்கிறார். தரிசனம் முடிந்ததும் விமானம் மூலம் ஐதராபாத் திரும்புகிறார்.
சந்திரபாபு நாயுடு 11 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சுமந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சந்திரபாபு நாயுடு வருகையை முன்னிட்டு திருமலையில் வரலாறு காணாத வகையில் 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. மலை பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு உள்ளது. கண்காணிப்பு பிரிவில் மட்டும் 1,500 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர 4,500 போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மலைபாதையில் 10 அடிக்கு ஒரு போலீஸ் என நிறுத்தப்பட உள்ளனர்.
இவர்கள் தவிர வெடிகுண்டு நிபுணர்கள், உளவு பிரிவு போலீசார், அதிரடி படையினர் ஆகியோரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.
விழாவை முன்னிட்டு கோவிலில் அனைத்து கட்டண தரிசனம், வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சாதாரண பக்தர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது என்றும் பக்தர்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி கிரிதர் கோபால் தெரிவித்தார்.
oviya- Posts : 1476
Join date : 30/11/2014
Similar topics
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை பிரமோற்சவம் தொடக்கம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்
» புத்தேரி ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
» இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் ரத்து
» திருப்பதி கோவில் பிரமோற்சவம் நாளை மறுநாள் தொடங்குகிறது
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 5ம் தேதி பிரமோற்சவம் தொடக்கம்
» புத்தேரி ஆதிபராசக்தி கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்
» இன்று ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் 6 மணி நேரம் தரிசனம் ரத்து
» திருப்பதி கோவில் பிரமோற்சவம் நாளை மறுநாள் தொடங்குகிறது
Day Tamil Nadu :: ஆன்மிகம் :: ஆன்மிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|
Fri Dec 12, 2014 1:45 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:43 pm by oviya
» பழநியில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Fri Dec 12, 2014 1:42 pm by oviya
» திருப்பதியில் நாளை (12.04.2014) வசந்த உற்சவம் தொடக்கம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் மாவிளக்கு திருவிழா
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» அகஸ்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
Fri Dec 12, 2014 1:39 pm by oviya
» சகல செல்வமும் அருளும் ஐஸ்வர்யேஸ்வரர்
Fri Dec 12, 2014 1:38 pm by oviya
» திருவாதிரை விரதம் சிவனுக்கு உகந்தது
Fri Dec 12, 2014 1:37 pm by oviya
» உப்புப்பாளையம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
Fri Dec 12, 2014 1:37 pm by oviya