Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2010  2014  


மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது

Go down

மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது Empty மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவு : சபரிமலை கோயில் நடை சாத்தப்பட்டது

Post by oviya Sun Dec 07, 2014 10:03 am

திருவனந்தபுரம்: மண்டல, மகர விளக்கு பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று காலை சாத்தப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் 12ம் தேதி நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 64 நாட்கள் நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜை நேற்று முன்தினம் இரவுடன் முடிவடைந்தது. கடந்த 14ம் தேதி மகர விளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகரஜோதியை தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்ததை அடுத்து நேற்று காலை 7 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. இதன் பின்னர் ஐயப்பனுக்கு ஜல அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பந்தளம் மன்னர் பிரதிநிதியான அசோகவர்மா தரிசனம் செய்தார். பின்னர் மேல்சாந்தி தாமோதரன் போத்தி கோயில் நடையை சாத்தி அதன் சாவியை அசோகவர்மாவிடம் கொடுத்தார்.

தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்துக்கு சபரிமலை கோயிலில் பூஜை நடத்த வேண்டும் எனக்கூறி அசோகவர்மா, கோயில் சாவியை மீண்டும் மேல்சாந்தியிடம் வழங்கினார். இதன்பின்னர் அசோகவர்மா 18ம் படி வழியாக இறங்கி சென்றார். இவ்வருட மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைந்தது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum