Day Tamil Nadu


Join the forum, it's quick and easy

Day Tamil Nadu
Day Tamil Nadu
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Search
 
 

Display results as :
 


Rechercher Advanced Search

Keywords

2014  2010  


கருப்பத்தூர்கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய 5 ஆயிரம் ஐயப்ப பக்தர்கள்

Go down

கருப்பத்தூர்கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய 5 ஆயிரம் ஐயப்ப பக்தர்கள் Empty கருப்பத்தூர்கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய 5 ஆயிரம் ஐயப்ப பக்தர்கள்

Post by oviya Sun Nov 30, 2014 2:09 pm

லாலாப்பேட்டையை அடுத்த கருப்பத்தூர் ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1–ந் தேதியான நேற்று சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மாலை அணிந்துக்கொண்டனர். தமிழகத்தில் முதல் ஐயப்பன் கோவில் என்று அழைக்கப்படும் இத்தளம் லாலாப்பேட்டையை அடுத்துள்ள கருப்பத்தூரில் அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் சித்திரவிசு, மண்டலபூஜை, மகரசங்கராந்தி விழாக்கள் விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்த்திகை 1–ந் தேதியான நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு பால், தேன், இளநீர், பஞ்சமிர்தம், விபூதி, சந்தனம், ஆகிய அபிஷேகப் பொருட்களில் மகாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை முதலே லாலாப்ேபுட்டை, கள்ளப் பள்ளி, புனவாசிப்பட்டி, மகாதானபுரம், பழைய ஜெயகொண்டம், கரூர், திருச்சி பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலை குவிய தொடங்கினர். ஐயப்பபக்தர்கள் காவிரியில் புனித நீராடி சபரி மலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல 1–ந் தேதியான நேற்று மாலையணிந்துக் கொண்டு விரதத்தை தொடங்கினர்.

தொடர்ந்து 40 நாட்கள் மண்டல உற்சவ நிகழ்ச்சிகள் தினமும் காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மதியம் 11.30க்கு அடைக்கப்படும். பின்பு மாலை 5 மணிக்கு நடைதிறந்து 8.30க்கு அடைக்கப்படும்.

மண்டல உற்சவ நிறைவு நாள் டிசம்பர் 27–ந்தேதி நடைபெறுகிறது. மகர சங்கராந்தி விழா தை 1 (ஜனவரி 14) அன்று நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் ஐயப்ப பக்தர்களும் செய்து வருகின்றனர்.

oviya

Posts : 1476
Join date : 30/11/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum